ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையை வீழ்த்தியது கேரளா பிளேஸ்டர்ஸ்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சிடம் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தியது.

Last Updated : Nov 13, 2016, 09:42 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையை வீழ்த்தியது கேரளா பிளேஸ்டர்ஸ் title=

கொச்சி: ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சிடம் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தியது.

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 37-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் சந்தித்தன.

22-வது நிமிடத்தில் பெர்னார்ட் மெண்டி அபாரமாக கோல் அடிக்க சென்னையின் எப்சி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய கேரள அணி சார்பில் காடியோ , வினீத் கோல் அடிக்க 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்த தோல்வியால் சென்னை அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

3-வது தோல்வியுடன் 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ள சென்னை அணி இனி ஒவ்வொரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

Trending News