5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா!

Last Updated : Sep 4, 2017, 09:09 AM IST
5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா! title=

இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா. 

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வந்தன. 4 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றது. நேற்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. 

முதலில் விளையாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வெல்ல 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் ரஹானேவும் களமிறங்கினர். ஆனால் இருவரும் நிலைக்கவில்லை. அடுத்தடுத்து அவுட் ஆகிவிட்டனர். 

பின்னர் களமிறங்கிய கோலி- மணீஷ் பாண்டே ஜோடி நிதானமாக விளையாடியது. மணீஷ் பாண்டே 36 ரன்களில் அவுட் ஆகினார். அசத்திய கோலி- ஜாதவ் இதையடுத்து கோலியுடன் கை கோர்த்தார் ஜாதவ். 

ஒருநாள் போட்டிகளில் கோலி 30-வது சதத்தையும் எட்டினார். 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜாதவ் அவுட் ஆனார். பின்னர் கோலியுடன் டோனி இணைந்தார். கோலி 110 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி வென்றது. 

இந்த வெற்றி மூலம் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியே வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளிடையே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் கொழும்பில் நடைபெறுகிறது.

Trending News