IND vs PAK : பரபரப்பான போட்டியில் வென்றது இந்தியா - பட்டையை கிளப்பிய கோலி

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 23, 2022, 06:56 PM IST
  • விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வானார்.
  • டி20 உலகக்கோப்பையில் 6 முறை மோதி, 5இல் இந்தியா வெற்றி பெற்றது.
  • கடந்த உலகக்கோப்பையில் அடைந்த படுதோல்விக்கு இந்தியா பழிதீர்த்தது.
IND vs PAK : பரபரப்பான போட்டியில் வென்றது இந்தியா - பட்டையை கிளப்பிய கோலி title=

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நேற்று தொடங்கின. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் இஃப்திகார் அகமது, ஷான் மசூத் ஆகியோர் அரைசதம் அடித்து மிரட்டினர். 

இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து, இந்திய அணியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

மேலும் படிக்க | IND vs PAK: கடுப்பில் திட்டிய பாண்டியா... அப்செட் ஆன ரோகித் - என்ன நடந்தது?

நசிம் ஷா வீசிய 2ஆவது ஓவரில் கேஎல் ராகுலும், ஹரீஷ் ராவுஃப் வசிய 4ஆவது ரோஹித் சர்மாவும் தலா 4 ரன்கள் எடுத்து வெளியேறினர், 

தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும், அக்சர் படேல் 2 ரன்களிலும் அடுத்து வெளியேற இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையை எட்டியது.  

இதன்பின், வந்த ஹர்திக் பாண்டியா, விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி சிறுக சிறுக ரன்களை சேர்த்து வந்தது. 

இதனால், கடைசி 3 ஓவரில் இந்திய அணிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து, ஷாகீன் அஃப்ரிடி வீசிய 18ஆவது ஓவரில் 17 ரன்களை அந்த ஜோடி எடுத்தது. விராட் கோலி அரைசதத்தையும் கடந்தார். அடுத்த 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 

ஆனால், 5ஆவது மற்றும் 6ஆவது விராட் கோலி அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டு இந்தியாவுக்கு பெரும் நம்பிக்கையை கொண்டு வந்தார். இதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 

கடைசி ஓவரை முகமது நவாஸ் வீச அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களில் அவுட்டாக, அடுத்த இரண்டு பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், 4ஆவது பந்தில் கோலி சிக்சர் அடிக்க மைதானம் பேரொலியில் அதிர்ந்தது. கூடுதலாக அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டு, ஃப்ரி-ஹிட்டும் வழங்கபட்டது. ஃப்ரி-ஹிட்டில் வைடாக வீச, மீண்டும் ஃப்ரி-ஹிட் பால் வீசப்பட்டது.

அதில் கோலி மூன்று ரன்களை எடுத்தார். கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதில், தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக பரப்பரப்பு அதிகமானது. அடுத்து பந்தை நவாஸ் வைடாக வீச, மீண்டும் கடைசி பந்தில் 1 ரன் வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பந்தை நிதானமாக எதிர்கொண்டு, ஆளே இல்லாத மிட் ஆஃப் திசையில் தூக்கி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 

இதன்மூலம், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியையும் பதிவு செய்தது. விராட் கோலி, 6 பவுண்டரிகள், 4 ரன் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனாகவும் விராட் கோலி தேர்வானார்.  இந்தியா முதல் 10 ஓவர்களில் 45 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 115 ரன்களை அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | T20 World Cup: மேட்சுக்கு முன்னால் செக்ஸ் வச்சிக்கோங்க - வைரலாகும் மருத்துவரின் அறிவுரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News