2-வது டி20 கிரிக்கெட் : இந்தியா,ஜிம்பாப்வே மோதல்

Last Updated : Jun 20, 2016, 11:28 AM IST
2-வது டி20 கிரிக்கெட் : இந்தியா,ஜிம்பாப்வே மோதல் title=

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

இரு அணிகளிடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளிடையேயான     2வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் டி20 போட்டியில் மணிஷ் பாண்டே சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தார். இன்றைய போட்டியிலும் அவரது பேட்டிங்கையே சிறப்பாக அமையும் என நம்பிக்கை உள்ளது. முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆன கே.எல்.ராகுல் இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு உதவுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல் டி20யில் இந்தியா தோற்பதற்கு பந்துவீச்சில் உள்ள பலவீனமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பந்துவீச்சில் கேப்டன் தோணி மாற்றங்களை செய்வார் என தெரிகிறது.  

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படும் தோனி, இந்த தொடரை எப்படியும் வெல்லவேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளார். அதே நேரத்தில் இந்தத் தொடரில் முதல் முறையாக வெற்றியை பெற்றுள்ள ஜிம்பாப்வே அணியும் தொடரை வெல்வதில் தீவிரமாக உள்ளது. அதனால் இன்றைய போட்டி கடுமையாக இருக்கும்.

Trending News