ஞானக்காரகரின் அருளால் அருமையான வாழ்க்கை அமையப்போகும் 3 ராசிக்காரர்கள்

Jupiter transit Positive Effects: அதிர்ஷ்டம் மற்றும் ஞானத்தின் காரகரான குருவின் நிலை ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும்... இன்னும் ஒரு வாரத்தில் குரு உங்களை என்ன செய்ய காத்திருக்கிறார்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 16, 2022, 11:53 PM IST
  • தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்
  • உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்
  • வர்த்தகர்களுக்கு முதலீட்டிற்கு ஏற்ற நேரம் இது
ஞானக்காரகரின் அருளால் அருமையான வாழ்க்கை அமையப்போகும் 3 ராசிக்காரர்கள் title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கிரகங்கள் அனைத்தும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும், அவ்வப்போது மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிக்க் கொண்டே இருக்கின்றன. இந்த கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் அனைத்து இராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதிர்ஷ்டம் மற்றும் ஞானத்தின் காரகரான குருவின் நிலை ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும்.

குரு பகவான், திருமணம், வேலை, மங்களத்திற்கு காரணமானவர். குரு பகவான் நவம்பர் 24ம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் சஞ்சரிப்பார். தற்போது வக்ர நிலையில் இருக்கும் குரு, நவம்பர் 24 முதல் தனது நிலையை மாற்றிக் கொள்வது சில ராசிக்காரர்களுக்கு நல்லதாக இருக்கும்.

குருவின் ராசி மாற்றமானது இந்த ராசிக்காரர்களுக்கு நிதானத்தை ஏற்படுத்தும். குருப் பெயர்சியால், எந்தெந்த ராசிக்காரர்கள் நிம்மதியாக இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்.  
 
மேஷம்: 

குருவின் இந்த சஞ்சாரம், மேஷ ராசிக்காரர்களுக்கு நிதானமாக செயல்பட வேண்டியதை உணர்த்தும் காலமாக இருக்கும். குரு பெயர்ச்சி, மேஷ ராசியினருக்கு வேலை பார்க்கும் இடத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். பெரிய முதலீடுகள் செய்யும்போது கவனமாக இருந்தால் லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இந்த காலகட்டத்தில் நன்கொடைகளை வழங்குவீர்கள். மூதாதையர் சொத்து அல்லது உங்கள் பரம்பரை சொத்து வந்து சேருவதற்கான வாய்ப்புகளை குரு கொடுப்பார்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு  குருவின் இந்த சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். தொழில்-வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.எதிர்பார்த்த லாபமோ, சம்பளமோ இல்லை என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு இனி நிம்மதி கிடைக்கும். பணம், புகழ் பெருமை வந்து சேரும் நேரம் இது. 

மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு, குரு உங்கள் ஒன்பதாம் இடமான அதிர்ஷ்டத்தை கொடுக்கும் இடத்திற்கு செல்கிறார். தகுந்த கூட்டாளிகளை தேடுபவர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் உங்கள் வாழ்க்கைத் துணையை காணலாம். குருவின் சஞ்சாரம் தொழில் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கும்.

புதிய முயற்சிகள் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெறலாம் மற்றும் அது சாதகமான முடிவுகளைத் தரும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முதலீடு பலனளிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News