30 நொடிகளில் 3 ஆந்தைகளை கண்டறிய வேண்டும்; சாவலை ஏற்க தயாரா...

Picture Puzzle: படத்தில் மறைந்துள்ள மூன்று ஆந்தைகளை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலாது என்பது தான் இதில் உள்ள சவாலே....

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 6, 2022, 12:50 PM IST
  • புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில் மிகச்சிறந்தவை.
  • மறைந்துள்ள மூன்று ஆந்தைகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை பார்ப்போம்.
30 நொடிகளில் 3 ஆந்தைகளை கண்டறிய வேண்டும்; சாவலை ஏற்க தயாரா...  title=

புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில்  மிகச்சிறந்தவை. இந்த படங்கள் ஆப்டிகல் மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன, 

தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் விஷயங்களில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதாவது ஒளியியல் மாயை. அதாவது நாம் பார்க்க கூடிய விஷயங்களை, மேலோட்டமாக பார்க்கும் போது, அதில் பொதிந்துள்ள ரகசியங்கள், மறைந்துள்ள விஷயங்களை அறிய இயலாது. 

ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது வேறொன்று இருப்பது புலப்படும். இதை தான் ஆப்டிகல் இலுஷன் என்று கூறுவார்கள். ஒளியியல் மாயை படங்கள் நமது மூளைக்கு சிறந்த வேலை கொடுக்கும் எனலாம். மூளையானது ஒன்றுடன் தொடர்புடைய மற்ற விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து அதற்கேற்ப செயல்படும். அப்போது அதில் ஒளிந்திருக்கும் நுனுக்கமான விஷயங்கள் கண்ணில் புலப்படும். அதனை வைத்து எந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் 6 உயிரினங்களை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

ஆப்டிகல் இல்யூஷன் என்கிற ஒளியியல் மாயை வைத்து நமது மூளையின் திறனை அறிந்து கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறும் நிலையில், இந்த கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மறைந்துள்ள மூன்று ஆந்தைகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை பார்ப்போம். இதை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலாது தான் என்றாலும், கூர்ந்து கவனித்து அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். என்ன சாவலை ஏற்க தயாரா

பகல் நேரத்தில் ஆந்தைகள் கிளைகளில் அமர்ந்திருக்கும் காட்டில் உள்ள மரங்களின் படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஆனால்  மூன்று ஆந்தைகளை கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. இந்தப் புதிரை 30 வினாடிகளுக்குள் தீர்க்கும் சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

 படத்தில் உள்ள பெரிய மரத்தில் எங்கோ மூன்று ஆந்தைகள் மறைந்துள்ளன. ஒரு ஆந்தையைக் கண்டறிவது எளிதானது அல்ல. சிலரால் மட்டுமே மூன்று பறவைகளையும் கண்டுபிடிக்க முடிந்தது.

ஆந்தையை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், புதிருக்கான பதில் இங்கே:

உங்களால் 3 ஆந்தைகளையும் கண்டுபிடிக்க முடிந்ததா......

மேலும் படிக்க | புதிர்: படத்தில் ஒளிந்திருக்கும் 8 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

மேலும் படிக்க | Picture Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடிகிறதா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News