வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு!!

கேரளாவில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated : Apr 23, 2019, 02:36 PM IST
வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு!! title=

கேரளாவில் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரம் ஆடியது. அதற்குள் பாம்பு இருப்பதை கண்ட வாக்களிக்க வந்த ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.

பாம்பை பார்த்த பயத்தில் வாக்களிக்க வரிசையில் இருந்த மக்கள் மற்றும் தேர்தல் அறையில் இருந்த அதிகாரிகள் அலறியடித்து ஓடினர். பின்னர் போலீசார் வந்து ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரத்தில் இருந்த பாம்பை வெளியே எடுத்து காட்டுப்பகுதியில் விட்டனர். பாம்பு இருந்ததால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவத்தால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

Trending News