சனியின் வக்ர பெயர்ச்சி; கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ஏப்ரல் 29ம் தேதி சனி கிரகம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 1, 2022, 02:24 PM IST
  • கும்ப ராசியில் செவ்வாய்-சனி சேர்க்கை
  • ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சி
  • இந்த 3 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் உண்டாகும்
சனியின் வக்ர பெயர்ச்சி; கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் title=

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியதாக இருக்கும் சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர். 2022ல் சனிப் பெயர்ச்சி இல்லை என்றாலும், அவரின் நீண்ட அதிசார மற்றும் வக்ர பெயர்ச்சியின் காரணமாக தற்போது மோசமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நற்பலனும், நற்பலன் அனுபவிக்கும் சில ராசிகளுக்கு கெடுபலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார். பின்னர் 12 ஜூலை 2022 அன்று சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக மகரத்தை அடைவார். சனி 12 ஜூலை 2022 அன்று திரும்பும் போது தனுசு, மிதுனம் மற்றும் துலாம் ராசிகளுக்கு மீண்டும் சனியின் கெடு பலன்கள் ஏற்படும். எனவே சனி பகவானால் எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 

கும்ப ராசியில் செவ்வாய்-சனி சேர்க்கை
* ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி பகவான் தற்போது கும்ப ராசிக்கு மாறியுள்ளார். செவ்வாய் ஏற்கனவே இந்த ராசியில் அமைந்துள்ளது. இந்த வகையில் கும்பத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை உருவாகி வருகிறது. இந்த இணைப்பு மே 17 வரை நீடிக்கும்.

* இதன் பிறகு செவ்வாய் தனது ராசியை மாற்றி மீன ராசியில் பிரவேசிப்பார். சனி-செவ்வாய் ஒரே ராசியில் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே ராசியில் இருந்தால் கெடுபலன்கள் ஏற்படலாம். 

* முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வன்முறை தொடர்பான சம்பவங்கள் அதிகரிக்கலாம்.

* மாறிவரும் வானிலை காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். வெப்ப சலனம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும். பங்குச் சந்தையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். அண்டை நாடுகளில் பதற்றம் அதிகரிக்கும்.

இந்த 3 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் உண்டாகும்
சனி-செவ்வாய் கிரகங்களின் அசுப யோகத்தின் தாக்கம் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிகம் தெரியும். இந்த நபர்கள் எப்போதும் கோபமாக இருக்கலாம், இதன் காரணமாக அவர்களின் உறவுமுறை மோசமடையக்கூடும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் கூடும். இந்த ராசிக்காரர்கள் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டம் ஏற்படும். இந்த நபர்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் காயம் மற்றும் சுளுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News