Post Office சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி: அட்டகாசமான வசதி துவங்கியது

Post Office NEFT, RTGS: மே 17ம் தேதி தபால் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், தபால் துறை மூலம் என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) வசதிகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 20, 2022, 10:44 AM IST
  • தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருக்கிறதா?
  • உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • என்இஎஃப்டி வசதி மே 18 முதல் தொடங்கியது.
Post Office சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி: அட்டகாசமான வசதி துவங்கியது title=

தபால் அலுவலக திட்டங்கள்: உங்களுக்கு தபால் நிலையத்தில் கணக்கு இருக்கிறதா? இருந்தால், இது உங்களுக்கு மிகவும் முக்கியமான செய்தியாக இருக்கும். இந்த செய்தியைப் படித்த பிறகு நிச்சயமாக உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். 

இப்போது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். கடந்த மே 17ம் தேதி தபால் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், தபால் துறை மூலம் என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) வசதிகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்இஎஃப்டி வசதி மே 18 முதல் தொடங்கியது

சுற்றறிக்கையின் அடிப்படையில், மே 18 முதல் என்இஎஃப்டி வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆர்டிஜிஎஸ் வசதி வரும் 31 மே 2022 முதல் கிடைக்கும். அதாவது, இப்போது தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்புவது முன்பை விட மிக எளிதாக இருக்கும். ஆர்டிஜிஎஸ் வசதி குறித்து சோதனைகள் நடந்து வருவதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி 31 மே 2022 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம், RBI முக்கிய அறிவிப்பு

என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் என்றால் என்ன?

என்இஎஃப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் மூலம், உங்கள் கணக்கிலிருந்து மற்ற கணக்குகளுக்கு மின்னணு முறையில் பணத்தை மாற்றலாம். இது பணத்தை மாற்றுவதற்கான விரைவான செயல்முறையாகும். என்இஎஃப்டி-இல் பணத்தை மாற்றுவதற்கு வரம்பு இல்லை. ஆர்டிஜிஎஸ்-இல், ஒரு நேரத்தில் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும். என்இஎஃப்டி-ஐ விட ஆர்டிஜிஎஸ்-ல் பணம் வேகமாக சென்றடைகிறது. இந்தச் சேவை 24×7×365, அதாவது ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எவ்வளவு சார்ஜ் கொடுக்க வேண்டும்? 

ரூ.10,000 வரையிலான என்இஎஃப்டி-க்கு, நீங்கள் ரூ.2.50 + ஜிஎஸ்டி ​​செலுத்த வேண்டும். 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய்க்கு, இந்த கட்டணம் 5 ரூபாய் + ஜிஎஸ்டி ஆக இருக்கும். இது தவிர, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான தொகைக்கு ரூ.15 + ஜிஎஸ்டியும், 2 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு ரூ.25 + ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | சொத்துக்கள் வாங்க PF தொகையை பயன்படுத்துவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News