Mauni amavasya 2023: மௌனி அமாவாசை அன்று செய்யக்கூடாத 5 பாவங்கள்

Mauni amavasya 2023; மௌனி அமாவாசை அன்று, புனிதமான நதி அல்லது நீர்நிலைகளில் நீராடினால் சகல பாவங்களும் அழிந்து விரும்பிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2023, 07:27 PM IST
Mauni amavasya 2023: மௌனி அமாவாசை அன்று செய்யக்கூடாத 5 பாவங்கள் title=

மாகா மாத கிருஷ்ண பக்ஷத்தில் வரும் அமாவாசை மௌனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மௌனி அமாவாசை மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. நதிகளில் புனித நீராடுவது வழக்கம். வழிபாடு, ஜப-தபங்கள், ஸ்நானம்-தானம் போன்றவற்றுக்கு மௌனி அமாவாசை நாள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் செய்யும் வழிபாட்டால், ஒருவருக்கு ஏற்படும் துன்பங்கள் விரைவில் நீங்கும், விரும்பிய விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

மௌனி அமாவாசை எப்போது?

பல யோக பலன்களை பெறக்கூடிய வாய்ப்பை கொடுக்கும் மௌனி அமாவாசை ஜனவரி 21, 2023, சனிக்கிழமை காலை 06:17 மணிக்கு தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நீடிக்கும் இந்த மகமாசம் அமாவாசையின் ஜனவரி 22, 2023, ஞாயிறு மதியம் 02:22 மணிக்கு நிறைவு பெறுகிறது. 

மௌனி அமாவாசையுடன் தொடர்புடைய 5 பெரும் பாவங்கள்: 

1. சாஸ்திரங்களில், அமாவாசை திதி, முன்னோர்களை வணங்குவதற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது, அதாவது தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள். பொதுவாகவே அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவதும், தொண்டு செய்வதும் முழு பலனைத் தரும் என்பது நம்பிக்கை. அப்படியிருக்கையில், குறிப்பாக இந்த மௌனி அமாவாசை நாளில் தனது முன்னோர்களை சபிப்பவர் அல்லது புறக்கணிப்பவர் வாழ்க்கையில் எல்லா வகையான கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும்.

2. பஞ்சாங்கத்தின் படி, அமாவாசை சனிக்கிழமையில் வந்தால், அது சனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சில தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு மௌனி அமாவாசையும், சனிக்கிழமையும் ஒன்றாக வந்துள்ளன. சனி அமாவாசை நாளில் சனிக்கு உகந்த செயல்களை செய்தால், ஒரு நபரின் ஜாதகத்தில் இருந்து சனி தோஷம் நீக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக, சனி தொடர்பான விஷயங்களை அலட்சியப்படுத்துவது எல்லாவிதமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் மௌனி அமாவாசை நாளில் தொழிலாளி வர்க்கம், மாற்றுத்திறனாளிகள், நாய்கள் போன்றவர்களை தவறாக துன்புறுத்தாதீர்கள்.

மேலும் படிக்க | தை அமாவாசையன்று இதை செய்தால், சனீஸ்வரரின் அருட்கடாட்சத்தால் வாழ்க்கை சிறக்கும் 

3. ஜோதிட சாஸ்திரப்படி மௌன நியமம், மௌனி அமாவாசை அன்று சொல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த புனிதமான திருநாளின் புண்ணியத்தைப் பெற முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும். தவறுதலாக கூட யாரிடமும் கெட்ட வார்த்தைகள் பேசக்கூடாது. அமாவாசை தினத்தில் ஒருவருடன் வாக்குவாதம் செய்தால் அது பல நாட்கள் நீடிக்கும். இதனால் ஒருவர் அனைத்து வகையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என்றும் நம்பப்படுகிறது.

4. ஜோதிட சாஸ்திரத்தின்படி, அமாவாசை நாளில் ஒருவர் தனது முழு வீட்டையும் சுத்தம் செய்ய வேண்டும். அமாவாசை நாளில் சுத்தம் செய்வது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை நபர் மீது பொழிவதாக நம்பப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்யாமல் தனது வீட்டை முழுவதுமாக அழுக்காக வைத்திருக்கும் ஒருவர் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

5. சாஸ்திரங்களில்.. அமாவாசை நாளில் சில விஷயங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன. மத நம்பிக்கையின்படி, துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கவும், நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவும் விரும்பும் ஒருவர் மௌனி அமாவாசை நாளில் அதிக நேரம் தூங்கக்கூடாது. அதேபோல, இந்த நாளில் கல்லறை போன்ற இருண்ட அல்லது வெறிச்சோடிய இடத்திற்குச் செல்லக்கூடாது. அத்தகைய இடங்களுக்குச் செல்லும்போது, ​​எதிர்மறை ஆற்றல் காரணமாக நபருக்கு தீங்கு விளைவிக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News