LPG subsidy: எல்பிஜி மீதான மானியம் குறித்து அரசின் பெரிய அறிக்கை

LPG subsidy: உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒன்பது கோடி பயனாளிகளுக்கு மட்டுமே எரிவாயு மானியம் கிடைக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 3, 2022, 07:26 AM IST
  • உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டர்
  • ரூ.200 மானியம் வழங்கப்படும்
  • இந்த மானியம் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே
LPG subsidy: எல்பிஜி மீதான மானியம் குறித்து அரசின் பெரிய அறிக்கை title=

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி இணைப்புகளைப் பெறும் ஒன்பது கோடி பயனாளிகளுக்கு மட்டுமே அரசாங்கம் எல்பிஜி மானியம் வழங்குகிறது, மற்ற பயனாளிகள் சந்தை விலையில் எல்பிஜி சிலிண்டர்களை பெறுவார்கள். 

இது தொடர்பாக பெட்ரோலியத் துறை செயலர் பங்கஜ் ஜெயின் வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது., ஜூன் 2020 முதல் எல்பிஜிக்கு மானியம் வழங்கப்படவில்லை. மேலும் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மானியம் வழங்கும் அறிவிப்பு மே 21 முதல் மட்டுமே பொருந்தும். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்ததுடன், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரு வருடத்திற்கு 12 கேஸ் சிலிண்டர்களில் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் சீதாராமன் அறிவித்தார். தற்போது 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,003 ஆக உள்ளது. ஆனால், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு சிலிண்டரும் முன்பதிவு செய்த பிறகு, அரசாங்கம் 200 ரூபாய் மானியமாக அனுப்பும்.

மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

இதன் மூலம், அவர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.803 ஆக ஆகும். இருப்பினும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒன்பது கோடி பயனாளிகளுக்கு மட்டுமே இந்த மானியம் கிடைக்கும்.  மீதமுள்ள 21 கோடிக்கும் அதிகமான கேஸ் இணைப்புதாரர்களுக்கு சந்தை விலையி தான் கேஸ் கிடைக்கும். மேலும் கூறிய அவர், மானியத்தின் கட்டமைப்பு காலப்போக்கில் குறைக்கப்படும் என்றார்.

இதற்கிடையில் கடந்த ஓராண்டில் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.103.50 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி ஜூன் 2021 இல், அதன் விலை ரூ.809 ஆகிய இருந்தது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், அதன் முழு சுமையும் எரிவாயு நுகர்வோர் மீது சுமத்தப்படவில்லை என்று பூரி கூறினார். இதனுடன், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் முதல் எரிவாயு சிலிண்டரை நிரப்புவதற்கு குறைந்த எண்ணிக்கையில் முன்வருகிறார்கள் என்ற செய்தியையும் அவர் மறுத்தார். 

இதனிடையே 2019-20 ஆம் ஆண்டில் 1.81 கோடியாக இருந்த ஒரு வருடத்தில் ஒரு எரிவாயு சிலிண்டரை மட்டுமே நிரப்பிய நுகர்வோரின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 1.08 கோடியாகக் குறைந்துள்ளது. இதனுடன், ஆண்டு முழுவதும் சராசரி தனிநபர் நுகர்வு 3.68 சிலிண்டர்கள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் மானியம் வரலயா? இப்படி செக் பண்ணுங்க
* முதலில் www.mylpg.in கிளிக் செய்யவும்.
* அடுத்து வலது பக்கத்தில் கேஸ் சிலிண்டரின் புகைப்படத்தைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.
* அடுத்து சேவை வழங்குநர் நிறுவனம் என்பதில் கிளிக் செய்யவும்.
* ஒரு புதிய பக்கம் இங்கே திறக்கும், அதை கிளிக் செய்யவும்.
* இங்கு சைன் இன் மற்றும் நியூ யூசர் என்ற ஆப்ஷன் தோன்றும். அதை கிளிக் செய்யவும்.
* ஐடி பராமரிக்கப்பட்டால், சைன் இன் என்பதைக் கிளிக் செய்யவும் இல்லையெனில் நியூ யூசர் என்பதை கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு, உங்கள் முன் இருக்கும் சிலிண்டர் முன்பதிவு வரலாற்றைக் கிளிக் செய்யவும்.
* இதற்குப் பிறகு, எந்தெந்த சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் கிடைத்துள்ளது என்பதைச் சரிபார்க்கலாம்.
* நீங்கள் மானியம் பெறவில்லை என்றால், பீட்பேக் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* மானியம் கிடைக்காததற்கும் இங்கு புகார் அளிக்கலாம்.
* கூடுதல் தகவலுக்கு 18002333555 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
 

மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News