கோடையிலும் உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்!

குளிர் காலத்தில் சளி, காய்ச்சல் வருவது சகஜம் என்றாலும் கோடைக்காலத்திலும் சிலருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : May 26, 2024, 03:19 PM IST
  • கோடையிலும் அடிக்கடி சளி பிடிக்கிறதா?
  • வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது.
  • நோயெதிர்ப்பு சக்தியை குறைகிறது.
கோடையிலும் உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்! title=

Why Do We Sneeze In Summer: கோடை காலத்தில் அதிக வெப்பம் இருக்கும். இதனால் உடலில் அதிக வியர்வை வெளியேறி பக்கவாதம் மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே இந்த சமயத்தில் உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது அவசியம். மேலும் சிலருக்கு ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனையும் ஏற்படுகிறது. பொதுவாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் சளி, இருமல், காய்ச்சல் வருவது சகஜம் தான். கிளைமேட் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு கோடைக்காலத்திலும் உடல் குளிர்ச்சியடைந்து சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

மேலும் படிக்க | வெயிட் லாஸ் பண்ணனுமா? இந்த கோல்டன் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க-வெற்றி நிச்சயம்!

கோடையில் ஏன் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது?

திடீர் வெப்பநிலை மாற்றங்கள்: கோடையில் சளி மற்றும் காய்ச்சல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்படுவது தான். கோடையில் அதிக வெப்பத்தை சமாளிக்க ஏசியை தேடி அலைகிறோம். இது போன்ற சமயத்தில் உடல் வெப்பநிலை உடனடியாக மாறுகிறது. மேலும் இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுதல்: கோடையில் சளி பிடிக்க மற்றொரு முக்கிய காரணங்களில் ஒன்று வெயிலை சமாளிக்க அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவது அல்லது கூலிங் வாட்டர் குடிப்பது ஆகும். இது தவிர வெயிலில் இருந்து வந்த உடனேயே தலைக்கு குளிப்பது, குளிர் பானங்கள் அருந்துவதும் காரணமாக அமைகின்றன. இதன் காரணமாக, சளி மற்றும் இருமல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

ஈரப்பதம் மற்றும் வியர்வை: கோடையில் உடலில் ஏற்படும் அதிக ஈரப்பதம் மற்றும் வியர்வை கூட குளிர்ச்சியை ஏற்படுத்தும். உடலில் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஈரப்பதமான சூழலில் வேகமாக வளரும் தன்மை கொண்டவை. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது மற்றும் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, சளி மற்றும் இருமல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

மாசு மற்றும் ஒவ்வாமை: கோடையில் சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கு மாசு மற்றும் ஒவ்வாமையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பொதுவாக கோடை காலத்தில் காற்றில் மகரந்தத்தின் அளவு அதிகமாகிறது. இது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். தும்மல், மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை புண் போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் சளி பிடித்தது போலவே இருக்கும். 

மறுப்பு: அன்புள்ள வாசகரே, இந்தச் செய்தியைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் எடுத்துள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடை குறையும்..இரவு உணவு சாப்பிட்ட பின்பு இந்த ஸ்நாக்ஸை சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News