ஒயின்ஷாப் பஞ்சாயத்து - பெண்களுக்கும், பவுன்சர்களுக்கும் அடிதடி

மதுபானக்கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பியபோது பெண்களுக்கும், பெண் பவுன்சர்களுக்கும் அடிதடி ஏற்பட்டது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 26, 2022, 09:07 AM IST
  • மதுக்கடைக்கு வெளியே பெண்களுக்குள் மோதல்
  • கோஷம் எழுப்பியபோது பெண் பவுன்சர்களுக்கும், பெண்களுக்கும் மோதல் முற்றியது
ஒயின்ஷாப் பஞ்சாயத்து - பெண்களுக்கும், பவுன்சர்களுக்கும் அடிதடி title=

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என பாட்டிலில் எழுதி மது விற்கப்பட்டாலும் நாட்டில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள்.

சோகமோ, மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் மது இல்லாமல் அந்த சூழலை பெரும்பாலும்  தற்போதைய காலத்தில் யாரும் கடப்பதில்லை. சிறிது சிறிதாக ஒருவரிடம் தொற்ற ஆரம்பிக்கும் மது பழக்கம் நாளடைவில் அனைவருக்கும் தீவிரமடைந்திருக்கிறதேயொழிய குறைந்ததில்லை.

இதனால் பலர் மதுவுக்கு அடிமையாகின்றனர். அதன் காரணமாக ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், சென்றாலும் கிடைக்கும் வருமானத்தை பயனுள்ளவகையில் செலவழிக்காமல் மதுவுக்கே தீர்த்துவிடுகின்றனர்.

மேலும் படிக்க | சிவசேனா எம்.எல்..க்கள் தங்கியுள்ள விடுதிக்கு வெளியே திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்

இப்படிப்பட்ட போக்கால் பலரின் குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது. இதனால் மதுக்கடைகளை மூட வேண்டுமென்ற கோரிக்கை பெண்களிடம் வலுவாகவே எழுந்திருக்கிறது. அதற்காக அவர்கள் போராட்டமும் செய்கின்றனர்.

அந்தவகையில் டெல்லி டிகிரி பகுதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. அதனை மூடக்கோரி பெண்கள் கடைக்கு முன்பு நின்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது மதுபானக்கடையில் பணியாற்றும் பெண்களுக்கும் (பவுன்சர்கள்) கோஷம் எழுப்பிய பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் படிக்க | செல்ல நாயின் பிறந்த நாள் - 100 கிலோ கேக் வெட்டி ஊருக்கே விருந்து வைத்து அசத்திய நபர்!

இரு தரப்பினருக்கும் நடந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அந்த சமயத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி சரமாரியாக குத்துக்களை கொடுத்தனர்.இந்த மோதலை தடுக்க வந்த காவலரும் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்துள்ளனர்.

மதுக்கடைகளை அகற்றக்கோரியபோது பெண்களுக்கும், பெண் பவுன்சர்களுக்கும் நடந்த அடிதடி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மேலும் படிக்க | பெற்றோர் மொபைலை ஹாக் செய்து மிரட்டும் 13 வயது சிறுவன்; ஆன்லைன் கேமிங்கால் வந்த வினை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News