கொல்கத்தா கொடூரம்: அன்றிரவு ரெட் லைட் ஏரியாவுக்கு சென்ற சஞ்சய் ராய் - உண்மை அறியும் சோதனையில் பகீர் தகவல்!

Kolkata Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் அவர் தெரிவித்த உண்மைகளை இங்கு காலவரிசைப்படி காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 26, 2024, 02:16 PM IST
  • குற்றம் நடந்த அன்று சஞ்சய் ராய் பாலியல் தொழில் நடைபெறும் பகுதிகளுக்கு சென்றுள்ளார்.
  • அங்கு அவர் எதிர்பார்த்தது நடக்காததை தொடர்ந்து காதலியிடம் வீடியோ காலில் பேசி உள்ளார்.
  • காதலியிடம் அப்போது நிர்வாண புகைப்படங்களை கேட்டுள்ளார், காதலியும் அதை அனுப்பி உள்ளார்.
கொல்கத்தா கொடூரம்: அன்றிரவு ரெட் லைட் ஏரியாவுக்கு சென்ற சஞ்சய் ராய் - உண்மை அறியும் சோதனையில் பகீர் தகவல்! title=

Kolkata Rape Murder Case Latest News Updates: கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ஆம் தேதி அன்று முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல இடங்களில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வேண்டியும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன. 

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் மருத்துவமனையில் தன்னார்வ பணியாளராக இருந்த சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் சிபிஐ விசாரணையில் உள்ளார். மேலும், இந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பணியாற்றிய 4 பேரிடமும் சிபிஐ தற்போது குறுக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட சஞ்சய் ராய்

இந்த வழக்கில் சஞ்சய் ராய் மட்டும்தான் ஈடுபட்டுள்ளாரா அல்லது வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய அந்த நான்கு மருத்துவர்களுக்கும், கல்லூரியின் முன்னாள் முதல்வருக்கும் உண்மை கண்டறியும் பரிசோதனை (Lie-Detector Test) மேற்கொள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தத. அதேபோல், குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி விசாரணையில் உள்ள சஞ்சய் ராய்க்கும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, அந்த உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு தயாரா என நீதிமன்றம் சஞ்சய் ராயிடம் கேள்வியெழுப்பிதற்கு அவர் தயார் என பதிலளித்திருந்தார். இதனை சஞ்சய் ராயின் வழக்கறிஞர் கபிதா சர்கார் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: அன்று நள்ளிரவு நடந்தது என்ன? விசாரணையில் அந்த 4 டாக்டர்கள்!

ஏன் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புகொள்கிறீர்கள் என நீதிமன்றம் சஞ்சய் ராயிடம் கேட்டபோது, அதற்கு அவர் தான் நிரபராதி என்றும் தன்னை இதில் சிக்கவைத்துவிட்டனர் என்றும் சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக வழக்கறிஞர் கபிதா தெரிவித்தார். அதாவது, உண்மை கண்டறியும் பரிசோதனையின் மூலம் வெளியுலகிற்கு உண்மை தெரிய வரவேண்டும் என விரும்புவதாக சஞ்சய் ராய் தெரிவித்தார்.

மற்றொரு பெண்ணுக்கும் பாதிப்பு

அதனை தொடர்ந்து, சஞ்சய் ராய்க்கு மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் அவர் குற்றத்தை ஒப்புகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக. 9ஆம் தேதி நடந்த சம்பவத்தை காலவரிசைப்படி சஞ்சய் ராய் விளக்கியுள்ளார். அதில் பாலியல் தொழில் நடக்கும் இரண்டு இடங்களுக்குச் சென்றும் அங்கு  யாருடனும் உடலுறவு மேற்கொள்ளாமல் வந்ததையும், அங்கு ஒரு பகுதியில் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதையும் அந்த பரிசோதனையில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியது அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

சஞ்சய் ராய் கூறியது என்ன?

இந்நிலையில், உண்மை கண்டறியும் பரிசோதனை சஞ்சய் ராய்க்கு நேற்று மேற்கொள்ளப்பட்டது. உண்மை கண்டறியும் பரிசோதனையில் சஞ்சய் ராய் கூறியது என்ன என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன, அவற்றை இங்கு கால வரிசைப்படி பார்க்கலாம். 

- ஆகஸ்ட் 8 அன்று சஞ்சய் ராய் மற்றும் அவரது நண்பர் ஒருவர் ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர் நண்பருடைய சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை பார்க்கவே அன்று வந்துள்ளனர். 

- ஆக. 8 இரவு 11.15 மணியளவில் சஞ்சய் ராய் மற்றும் அவரது நண்பர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு மது அருந்த முடிவெடுத்துள்ளனர். அவர்கள் மதுவை வாங்கி சாலையிலேயே மது அருந்தி உள்ளனர். 

- அதன் பின்னர் வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோனாகச்சி என்ற பாலியல் தொழில் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் தெற்கு கொல்கத்தாவில் உள்ள செட்லா என்ற மற்றொரு பாலியல் தொழில் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர். 

- செட்லாவுக்கு செல்லும் வழியில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இது அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 

- செட்லாவில் சஞ்சய் ராயில் நண்பர் ஒரு பெண்ணுடன் உடலுறவு மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த அறையின் வெளியே சஞ்சய் ராய் நின்றிருக்கிறார். அங்கிருந்து தனது காதலியுடன் சஞ்சய் ராய் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது காதலியிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். அந்த பெண்ணும் அதனை அனுப்பி உள்ளார். 

- அதன்பின் சஞ்சய் ராய் மற்றும் அவரது நண்பர் ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். சஞ்சய் ராய் அவசர சிகிச்சை பிரிவின் நான்காவது மாடிக்கு சென்றுள்ளார்.

- சஞ்சய் ராய் சம்பவம் நடந்த மூன்றாவது மாடியில் உள்ள கருத்தரங்கு அறைக்கு பக்கத்தில் உள்ள நடைபாதைக்கு 4.03 மணிக்கு சென்றது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அப்போது சஞ்சய் ராய் கருத்தரங்கு அறையில் நுழைந்துள்ளார், பாதிக்கப்பட்ட பெண் அங்கு தூங்கிக்கொண்டிருந்தார். அந்த பெண்ணை கழுத்தை நெறித்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பின்னர் சம்பவத்தில் இடத்தைவிட்டு சென்றுள்ளார். 

- சஞ்சய் ராய் அங்கிருந்து அனுபம் தத்தா என்ற அவரது மற்றொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அனுபம் தத்தா கொல்கத்தா போலீஸ் அதிகாரி ஆவார். 

- சஞ்சய் ராய் மற்றும் அவரது நண்பர் சென்றதாக சொல்லிய அனைத்தும் இடங்களும், சம்பவங்களும் உண்மை என்பது அவர்களின் செல்போன் கால் டேட்டா பதிவுகள் (CDRs) மூலம் உறுதியானதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக சஞ்சய் ராயின் மொபைலில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. அதிலும் குடும்ப உறவுகளுக்கு இடையிலான ஆபாச படங்களும் அதில் இருந்துள்ளன. எனவே, அவரை உளவியல் ரீதியாகவும் மதிப்பீடு செய்ய சிபிஐ அதிகாரிகள் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | நடிகர் சித்திக் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்! பிரபல நடிகை குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News