கும்பமேளா-விற்காக 20000 சைவ காவலர்கள், உபி காவல்துறை அதிரடி!

உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் வரும் ஜனவரி 15-ஆம் நாள் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவின் பாதுகாப்பு பணிக்காக 20000 சைவ காவலர்களை ஈடுப்படுத்து மாநில அரசு திட்டமிட்டுள்ளது!

Last Updated : Jan 7, 2019, 11:10 AM IST
கும்பமேளா-விற்காக 20000 சைவ காவலர்கள், உபி காவல்துறை அதிரடி! title=

உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் வரும் ஜனவரி 15-ஆம் நாள் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவின் பாதுகாப்பு பணிக்காக 20000 சைவ காவலர்களை ஈடுப்படுத்து மாநில அரசு திட்டமிட்டுள்ளது!

பிரியாகராஜ் என பெர்மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தின் முதல் கும்பமேளா வரும் ஜனவரி 15-ஆம் நாள் வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது. எதிர்வரும் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. இதுகுறித்து உத்திரபிரதேச மாநில துணை ஆய்வாளர் தெரிவிக்கையில்... கும்பமேளா பாதுகாப்பு பணிக்காக மதுபழக்கம் அற்ற காவலர்கள் மற்றும் அசைவ உணவை புறக்கணிக்கும் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களை கொண்டே பாதுகாப்பு பணிகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரியின் தகவல்கள் படி, கும்பமேளா பாதுகாப்பு பணியில் சுமார் 20000 காவலர்கள் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேவேலையில் இந்தாண்டு கும்பமேளாவிற்கு லட்ச கணக்கான பக்தர்கள் வருகை புரிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அலைகடலாய் திரண்டு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த இந்த காவலர்கள் முழுவீச்சில் செயல்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை அறிவிப்பின் படி, கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் தங்களது அடையாள அட்டை, மற்றும் அனைவரும் தங்களது குடும்பத்தாரின் கைப்பேசி எண்களை உடன் கொண்டிருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரியகராஜில் கும்ப மேளா வரும் ஜனவரி 15-ஆம் தேதி துவங்கி மார்ச் 4-ஆம் நாள் வரை நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படும் கும்ப மேளா யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத்தின் தகுதியைப் பெற்றுள்ளது. 'மனிதகுலத்தின் அருவமான கலாச்சார மரபு' பட்டியலில் இந்த கும்பமேளா சேர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்ப மேளாவின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் நிர்வாணமாக, சாம்பல் பூசிய தோற்றத்துடன் பூஜைகள் செய்து கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகளில் குளித்து புண்ணியம் அடைவர். கங்கை நீரில் குளித்தல் தான் செய்த பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை கொண்டு மக்கள் இந்த கும்பமேளாவில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News