மும்பை வெள்ளம்: போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

Last Updated : Aug 5, 2016, 03:28 PM IST
மும்பை வெள்ளம்: போக்குவரத்து கடுமையாக பாதிப்பு title=

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரெயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

மும்பை தவிர தானே, பால்கர், ராய்காட் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

Trending News