மேகாலயா எம்.எல்.ஏ. ஜுலியஸ் தோர்பங் கைது

மேகாலாயா மாநிலத்தில் கடந்த மாதம், மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில உள்துறை மந்திரியுமான லிங்டோ என்பவரின் மகனுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். 

Last Updated : Jan 7, 2017, 02:26 PM IST
மேகாலயா எம்.எல்.ஏ. ஜுலியஸ் தோர்பங் கைது title=

ஷில்லாங்: மேகாலாயா மாநிலத்தில் கடந்த மாதம், மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில உள்துறை மந்திரியுமான லிங்டோ என்பவரின் மகனுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். 

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய மந்திரியின் மகன் 4 பெண்கள் உள்பட எட்டுபேரை கைது செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை சீரழித்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அம்மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ஜுலியஸ் தோர்பங்க் என்பவரை மாநிலத்தின் பல பகுதிகளில் போலீசார் தனிப்படை அமைத்து, வலை வீசி தேடி வந்தனர். 

இந்த நிலையில் ஜுலியஸ் தோர்பங் அசாமில் தலைமறைவாக பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அசாம் மாநிலத்துக்கு விரைந்த போலீஸ் தனிப்படையினர், அங்கு ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த ஜுலியஸ் தோர்பங்கை சுற்றி வளைத்து பிடித்தனர். 

Trending News