சபரிமலை வழக்கு; அரசு சார்பில் மறுசீராய்வு மனு இல்லை!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2018, 01:45 PM IST
சபரிமலை வழக்கு; அரசு சார்பில் மறுசீராய்வு மனு இல்லை! title=

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!

முன்னதாக இன்று காலை சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய ஐய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள்... கேரள அரசு சார்பில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என தெரிவித்துள்ளார். மேலும் RSS அமைப்பினர் இந்த விவகாரத்தில் ஆதாயம் காண முயற்சிக்கின்றனர். இதன் காரணமாகவே தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

#சபரிமலையில்_பெண்கள்_அனுமதி...

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது.

உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போராட்டத்தில் சில பெண்கள் பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்று வருகின்றனர். திருவனந்தபுரத்தில் கள்ளிப்பாலம் பகுதியிலும், இடுக்கியிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News