ஜம்மு-வில் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகள் பலி!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது! இதில் நான்கு  பயங்கரவாதிகள் சூட்டு கொல்லப்பட்டனர்!

Last Updated : Jun 22, 2018, 01:31 PM IST
ஜம்மு-வில் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகள் பலி! title=

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதி அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைத்து வந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. 

இந்த மோதலில், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு  பயங்கரவாதிகள் சூட்டு கொல்லப்பட்டனர்!

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி இரண்டு பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். இருப்பினும் அந்த பகுதிகளில் தொடர் பதற்றம் நிலவி வருகின்றது. 

Trending News