சிலரின் ‘பொறுப்பற்ற நடத்தை’யால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்... பினராயி வருத்தம்!

கேரளாவில் ஐந்து பிரிட்டிஷ் குடிமக்கள் உட்பட மேலும் 12 பேர் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Last Updated : Mar 20, 2020, 11:04 PM IST
சிலரின் ‘பொறுப்பற்ற நடத்தை’யால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்...  பினராயி வருத்தம்! title=

கேரளாவில் ஐந்து பிரிட்டிஷ் குடிமக்கள் உட்பட மேலும் 12 பேர் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு திரும்பியவர்கள் சிலரின் "பொறுப்பற்ற நடத்தை" மாநிலத்தில் நிலைமையை மிகவும் தீவிரமாக்குகிறது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் காசர்கோட்டில் ஐக்கிய அரபு எமிரேட்-ல் இருந்து திரும்பியவரின் வழக்கை அவர் குறிப்பிட்டார் என்பது தெரிகிறது. முன்னாதக அவர் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டார், ஆனால் அவர் வீட்டு தனிமைப்படுத்தலைத் தவிர்த்து பல நிகழ்வுகளில் பங்கேற்றார், இதன் காரணமா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கேரளாவில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை கூர்மையாக வீடுகளில் 44,165-லிருந்து 44,390-ஆகவும், மருத்துவமனைகளிலும் 225-ஆகவும் அதிகரித்துள்ளது. "அதிகரித்து வரும் எண்ணிக்கை ஒரு தீவிர கவலை. நிலைமையின் ஈர்ப்பை சிலர் இன்னும் உணரவில்லை என்று தெரிகிறது. அத்தகைய நபர்களை நாங்கள் கடுமையாக கையாள்வோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாதிக்கப்பட்டவர்கள் திருமணங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பல செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளனர் என குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர், என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த காசர்கோட்டில் பல கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்படும், கடைகள் ஓரளவு திறக்கப்படும், போக்குவரத்து தடை செய்யப்படும். "நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இது போன்ற தவறுகள் மாநிலத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும்," என குறிப்பிட்டார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘ஜனதா ஊரடங்கு உத்தரவு’க்கும் முதல்வர் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார். “நாங்கள் இதை ஆதரிப்போம். மாநில போக்குவரத்து பேருந்துகள், கொச்சி மெட்ரோ மற்றும் பிற சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும். அவசர சேவைகள் மட்டுமே இருக்கும், ”என்று அவர் கூறினார், கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்திற்கான நேரம் இது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Trending News