#CWG_2018: துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்றார் அன்கூர்!!

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் கிடைத்தது.

Last Updated : Apr 11, 2018, 01:47 PM IST
#CWG_2018: துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்றார் அன்கூர்!! title=

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் கிடைத்தது. டபுள் டிராப் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அன்கூர் மிட்டல் வெண்கலம் வென்றார். 

21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.

இதில், 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் தரவரிசையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 38 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலத்துடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 22 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

கனடா, ஸ்காட்லாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாம் இடங்களை வகிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவின் ஹாக்கி அணி சார்பில் நேற்று களமிறங்கிய இந்தியாவை சேர்ந்த ஹர்மர்பிரீத், மலேசியா அணியை 2-1 என்ற நிலையில் வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

இதை தொடர்ந்து, இன்று நடைபெற்ற ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம்பிரகாஷ் மிதர்வால் வெண்கலம் வென்றுள்ளார்.

மேலும், 48 கி.கி எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் மேரிகோம் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதிலும் அவருக்கு தங்கம், அல்லது வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது.

இதை தொடர்ந்து, டபுள் டிராப் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்ரேயாசி சிங் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா 12 தங்கப்பதக்கங்களுடன் 3வது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், தற்போது ஆடவர் டபுள் டிராப் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அன்கூர் மிட்டல் வெண்கலம் வென்றுள்ளார்.

மேலும், பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

Trending News