வெள்ளை முடியை கருப்பாக்க இந்த மூன்று பொருள் இருந்தால் போதும்

ஆரம்பகால வெள்ளை முடியை அகற்றுவது மிகவும் கடினமானது மற்றும் அவற்றை புடிங்குவதோ அல்லது மருதாணி பூசுவதோ பெரிய பலனைத் தராது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 13, 2022, 02:55 PM IST
  • வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க வீட்டு வைத்தியம்.
  • சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனை.
  • இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தினால் மீண்டும் முடி கருப்பாக்கும்.
வெள்ளை முடியை கருப்பாக்க இந்த மூன்று பொருள் இருந்தால் போதும் title=

முடி நரைப்பதற்கு ஒரு நிலையான காரணம் இல்லை. வயது, சூழல், உணவு முறை போன்ற பல காரணங்களால் முடி வெண்மையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டால் பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். அதன்படி வெள்ளை முடியை மறைக்க கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது முடியை இன்னுமும் சேதப்படுத்துகிறது. மேலும் இவை நம் தலை முடிக்கு சரியான பலனைத் தராது.

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. எனவே உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அவற்றை பின்பற்றுவதன் மூலம் சிறந்த தீர்வை பெறலாம்.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

காபி
காபியின் இயற்கையான நிறம் கூந்தலை கருமையாக்குவதில் மிகவும் நன்மை பயக்கும். இதைப் பயன்படுத்த, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கி, அதில் ஒரு ஸ்பூன் காபி தூளை சேர்க்கவும். தண்ணீர் ஆறியதும் அதில் மருதாணி சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது தயாரித்த பேஸ்ட்டை ஒரு மணி நேரம் வைத்திருந்து அதில் ஆலிவ் ஆயில் கலந்து தலைமுடியில் தடவவும். இந்த கலவையால், உங்கள் வெள்ளை முடி கருப்பாக மாறும், அத்துடன் இது எவ்வித பக்க விளைவயும் ஏற்படுத்தாது.

கற்றாழை ஜெல்
ஆரம்ப வெள்ளை முடியில் கற்றாழை ஜெல்லை சரியாகப் பயன்படுத்தினால், சில முடிகள் எளிதில் கருப்பாக மாறும். கற்றாழை ஜெல்லில் எலுமிச்சை சாறு பிழிந்து தலைமுடியில் தடவவும். நீங்கள் இதை தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை, வாரத்திற்கு ஒரு முறை அல்லது அதிகபட்சம் 2 முறை பயன்படுத்தலாம். இந்த வைதியத்தை உபயோகித்த சில நாட்களுக்குப் பிறகுதான் விளைவைப் பார்க்க முடியும். என்வே அவசரம் வேண்டும்.

கறிவேப்பிலை
சிறிது கறிவேப்பிலையை எடுத்து நைசாக அரைக்கவும். இப்போது 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூளில் 2 டீஸ்பூன் பிரமி பொடியை கலந்து, தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இந்த ஹேர் மாஸ்க்கை வேர்களில் இருந்து முடி முழுவதும் தடவி, ஒரு மணி நேரம் கழித்து தலையை நன்றாக கழுவுங்கள். அதன் பலனை காலப்போக்கில் காண்பீர்கள். இந்த செய்முறையானது முடியை கருப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகிறது.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News