உலர் பழங்கள் Vs ஊற வைத்த உலர் பழங்கள்... இரண்டில் எது பெஸ்ட்!

உலர் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், உலர் பழங்களை ஊறவைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா; அல்லது அப்படியே எடுத்துக் கொள்வது நல்லதா என பலருக்கு கேள்வி மனதில் எழுவதுண்டு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 9, 2022, 02:43 PM IST
  • சில உலர் பழங்களை ஊறவைத்து உண்பதால் பலன் இரட்டிப்பாகும்.
  • ஊற வைத்து சாப்பிடக்கூடாத சில உலர் பழங்களையும் அறிந்து கொள்ளலாம்.
  • ஊறவைத்த உலர்பழங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குவதன் மூலம் எடையை எளிதில் குறைக்கலாம்.
உலர் பழங்கள் Vs ஊற வைத்த உலர் பழங்கள்... இரண்டில் எது பெஸ்ட்! title=

உலர் பழங்கள் உங்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். அவற்றில் வைட்டமின்கள் அல்லது தாதுக்கள் மட்டுமல்ல, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இதனை மக்கள் உட்கொள்ளும் போது, ​​கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமின்றி, பல நோய்களில் இருந்து உங்களை காக்கவும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், எந்த உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆனால், உலர் பழங்களை ஊறவைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா; அல்லது அப்படியே எடுத்துக் கொள்வது நல்லதா என பலருக்கு கேள்வி மனதில் எழுவதுண்டு. 

சில உலர் பழங்களை ஊறவைத்து உண்பதால் பலன் இரட்டிப்பாகும். ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். எனினும் சில உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிடக் கூடாது. அனைத்து உலர்ந்த பழங்களையும் ஊறவைத்து சாப்பிடுவது பயனளிக்காது. பாதாம், திராட்சை மற்றும் பிளம்ஸ் போன்ற உலர் பழங்களை ஊறவைப்பது அதிக நன்மை பயக்கும்.

ஊற வைத்து சாப்பிடக்கூடாத உலர் பழங்களையும் அறிந்து கொள்ளலாம். முந்திரி, வால்நட், வேர்க்கடலை, பிஸ்தா, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்களை ஊற வைக்காமல் உட்கொள்ளலாம். சில உலர் பழங்களில், குறிப்பாக அக்ரூட் பருப்புகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன,. இவற்றை ஊறவைத்தால் இந்த சத்துக்கள் அழிக்கப்படலாம். எனவே இதனை ஊறவைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். இருப்பினும், நீங்கள் பேரீச்சம்பழத்தை இரண்டு வழிகளிலும் உட்கொள்ளலாம், அவற்றை ஊறவைத்து சாப்பிடலாம் மற்றும் உலர்ந்த வடிவத்திலும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

காலையில் ஊறவைத்த பருப்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகளும் ஊறவைத்த பருப்புகளுடன் தங்கள் நாளைத் தொடங்கலாம். ஏனெனில் இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள், தினசரி காலை ஊறவைத்த உலர் பழங்களுடன் தொடங்குங்கள். மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஊறவைத்த உலர்பழங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குவதன் மூலம் எடையை எளிதில் குறைக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Alert! 'இவற்றை' சாப்பிட்ட பிறகு பால் அருந்தக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News