நரம்பு தளர்ச்சி முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் முருங்கை...!

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்றும் ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் முருங்கை இலை பூ காய் வேர் என அனைத்தையும் சாப்பிட்டு வருபவர், வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதே அதன் பொருள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 17, 2024, 07:13 AM IST
  • முருங்கை இலை மட்டுமல்ல அதன் காய், பூ என அனைத்தும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டது.
  • முருங்கைக்கீரை, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
  • மருத்துவம் குணங்கள் நிறைந்தது என்பதால் முருங்கையை மருத்துவ பொக்கிஷம் என்றும் அழைத்தார்கள்.
நரம்பு தளர்ச்சி முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் முருங்கை...! title=

முருங்கை அதிசய காய் கனிகளில் ஒன்று என கூறலாம். இதன் அருமை பெருமையை உணர்ந்த நமது பெரியவர்கள், முருங்கையை நொறுங்க தின்றால் 3000 வராது என்று கூறுவார்கள். அதாவது பலவிதமான நோய்களை வராமல் தடுக்கலாம் என்பது இதன் பொருளாகும். முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்றும் ஒரு பழமொழி உண்டு.  அதன் பொருள் முருங்கை இலை பூ காய் வேர் என அனைத்தையும் சாப்பிட்டு வருபவர், வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதே அதன் பொருள். முருங்கையின் இலை மட்டுமல்ல, அதன் காய், இலை விதை, வேர்ப்பகுதி, முருங்கை மரத்திலிருந்து வரும் பிசின் போன்ற பொருள், என அனைத்தும் மருத்துவம் குணங்கள் நிறைந்தது என்பதால் இதனை மருத்துவ பொக்கிஷம் என்றும் அழைத்தார்கள்.

முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்கள்

முருங்கைக் கீரையில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி, கே, சி, டி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் நீரிழிவு நோயாளிகள் முதல் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த நினைப்பவர்கள் வரை, பலருக்கும் இது அரு மருந்தாக அமைகிறது. கீரைகளில், இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை முருங்கை இலை. அதோடு ஆரஞ்சில் இருப்பதைவிட, அதிக அளவு வைட்டமின் சி நிரம்பியுள்ளதாகவும், பாலை விட 4 மடங்கு கால்சியம் அதிகம் இருப்பதாகவும், கேரட்டை விட நான்கு மடங்கு அதிக விட்டமின் இங்கே இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். முருங்கை இலை, காய், பூ ஆகியவற்றை தொடர்ந்து சமையலில் சேர்த்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அது மட்டுமல்லாது, இளம் முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் முருங்கை

முருங்கைக்கீரை, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய் (Heart Health)  வராமல் நம்மை பாதுகாக்கிறது. அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் முருங்கைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆய்வுகளில் முருங்கைக்கீரை கசாயம் அருந்தியவர்களுக்கு, சிஸ்டாலிக் மற்றும் டயாஸ்டாலிக் ரத்த அழுத்த அளவு குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டது நிரூபணம் ஆகி உள்ளது. மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் குணங்கள் நிறைந்திருப்பதால் உடலில் வீக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து, முருங்கை நிவாரணம் அளிக்கும்.

மேலும் படிக்க | Asafoetida: உணவில் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் செய்யும் ஆரோக்கிய மாயம்! டிரை பண்ணி பாருங்க!

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் முருங்கை

முருங்கை இலை மட்டுமல்ல அதன் காய், பூ என அனைத்தும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதனைத் தொடர்ந்து உண்பதால் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும் மிக உதவியாக இருக்கும்.

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் முருங்கை

நரம்பு தளர்ச்சி நீங்க முருங்கை வேர் மிகவும் உதவும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, சிறிதளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சியில் இருந்து விடுதலை பெறலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். எனினும் மருந்தாக சாப்பிட முடிவு செய்தால், ஆயுர்வேத நிபுணர்களை கலந்தாலோசித்த பிறகு, உங்களுக்கு ஏற்ற அளவை, அவர் பரிந்துரைத்த படி உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கீழ்வாத நோய்க்கு மருந்தாகும் முருங்கை

முருங்கையில், ஃபிளவனாய்டுகள் உள்ளிட்ட உடல் அழற்ச்சியை போக்கும் கலவைகள் இருப்பதால், கீழ் வாதத்திற்கு மருந்தாக இருக்கும். இதனால் மூட்டு வலி, கீல்வாத பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். அதோடு, உடலில் சேரும் யூரிக் அமிலத்தை குறைக்கும் பண்பு உள்ளதால், கீல்வாத பிரச்சினைகள் நீங்கி வலி குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை

நோய் எதிர்ப்பு சக்தி இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை. கொரோனா காலத்தில் இருந்து, நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை பலர் அறிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முருங்கை இலையில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், தொற்று நோய்களிலிருந்தும் பருவ கால நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அதோடு இதில் உள்ள அல்சர் எதிர்ப்பு பண்புகள், வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றி நிவாரணம் அளிக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News