பிரிஞ்சி இலை: நீரிழிவு நோய் முதல் சிறுநீரக கல் வரை.... பன்மடங்கு நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியம்

Health Tips: பிரிஞ்சி இலைகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2023, 08:46 PM IST
  • பிரிஞ்சி இலை நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • இதனுடன் நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.
பிரிஞ்சி இலை: நீரிழிவு நோய் முதல் சிறுநீரக கல் வரை.... பன்மடங்கு நிவாரணம் அளிக்கும் வீட்டு வைத்தியம் title=

Health Tips: பெரும்பாலான இந்தியர்கள் உணவின் சுவையை அதிகரிக்க வலுவான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பிரிஞ்சி இலையும் மிகவும் பிரபலமான ஒரு மசாலா ஆகும். இதன் சுவை உணவுக்கு உயிர் சேர்க்கிறது என்றே சொல்லலாம். இதை சாப்பிடும் போது உணவிற்கு சுவையோடு நறுமணமும் கிடைக்கின்றது. ஆனால், இந்த பிரிஞ்சி இலைகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்தவும், குணப்படுத்த முடியாத நோயான நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நீரிழிவு நோய்க்கு பிரிஞ்சி இலைகள் (Benefits of Bay Leaf)

தற்போது சுமார் 80 மில்லியன் மக்கள் நீரிழிவு (Diabetes) போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் சில ஆண்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு அதிகரிக்கும். தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் உருவாகும் இந்நோய், கொடிய வடிவத்தை எடுத்து, பிற நோய்களையும் தூண்டி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உயிரையும் பறிக்கக்கூடும் என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இருப்பினும், நமது உணவு முறையில் மாற்றங்களை செய்தால் இதைக் கட்டுப்படுத்தலாம். இவற்றில், பிரிஞ்சி இலைகள் நமக்கு வெகுவாக உதவக்கூடும். வீட்டிலேயே சமையலறையில் இருக்கும் இந்த பிரியாணி இலைகளை சரியாக உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். காய்ந்த பிரியாணி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிரிஞ்சி இலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் 

உணவின் சுவையை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பிரிஞ்சி இலையில் ஏராளமான ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் இரும்புச்சத்து, தாமிரம், செலினியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீரிழிவு உட்பட பல நோய்களை இந்த இலை குணப்படுத்தும் காரணம் இதுதான். இது உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

பிரிஞ்சி இலை நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது

பல ஆராய்ச்சிகளில், பிரிஞ்சி இலை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமானதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனுடன் நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.

பிரிஞ்சி இலைகளை உட்கொள்வது எப்படி? 

உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பிரிஞ்சி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவில் சேர்ந்துவிடுகின்றன. அந்த உணவை நாம் உட்கொள்ளும் போது நமக்கு அதன் நன்மைகள் கிடைக்கின்றன. இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதும் பலன் தரும். 

மேலும் படிக்க | வேகவேகமா தொப்பையை குறைக்கணுமா? இந்த சமையலறை மசாலாக்கள் உதவும்

அதேசமயம் நீரிழிவு நோயாளிகள் இதை வேறு விதமாக உட்கொள்ள வேண்டும். உலர்ந்த பிரிஞ்சி இலைகளை இரவில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும் இலையை எடுத்து அதன் நீரை அருந்த வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இந்த நோய்களிலும் பிரிஞ்சி இலை நன்மை பயக்கும்

பிரிஞ்சி இலை மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையை குணப்படுத்துகிறது

பிரிஞ்சி இலைகளை தொடர்ந்து உட்கொள்வது வயிறு தொடர்பான பல நோய்களை குணப்படுத்துகிறது. வயிற்று வலி, மலச்சிக்கல், பிடிப்புகள் மற்றும் அசிடிட்டி (Acidity) பிரச்சனைகளுக்கு இதனை உட்கொள்வது நல்லது. இது செரிமான செயல்முறையை சரியாக வைத்திருக்கும்.

சிறுநீரக கல் பிரச்சனைகளை நீக்குகிறது

சிறுநீரக கற்கள் (Kidney Stone) பிரச்சனையில் பிரிஞ்சி இலை ஒரு வரப்பிரசாதமாக உதவும். இதற்கு முதலில் பிரிஞ்சி இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, தண்ணீரை ஆறவைத்து வடிகட்டி குடிக்கவும். இதன் மூலம் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் உருகி வெளியேறும்.

தூக்கமின்மை பிரச்சனையை நீக்குகிறது

பிரிஞ்சி இலைகளை (Bay Leaf) உட்கொள்வது தூங்க முடியாதவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். பிரிஞ்சி இலை எண்ணெய் இதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் எண்ணெயை இரண்டு மூன்று துளிகள் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவுக்கும் பிபிக்கும் மாமருந்தாகும் அரசமர பட்டை... பயன்படுத்தும் சரியான முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News