LIC-ன் புதிய திட்டம்: ஒருமுறை டெபாசிட் செய்தால் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்!

ஓய்வூதியம் பெறுபவர் அவர்களும் தேர்வு செய்யும் ஆப்ஷனை பொறுத்து ஒவ்வொரு மாதமும், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறலாம்.   

Written by - RK Spark | Last Updated : Aug 7, 2022, 06:40 AM IST
  • எல்ஐசி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • பாலிசிதாரர் இரண்டு ஆண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • இதில் பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகும் கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.
LIC-ன் புதிய திட்டம்: ஒருமுறை டெபாசிட் செய்தால் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்! title=

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சாரல் ஓய்வூதியத் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை  தொடங்கியுள்ளது, இது நான்-லிங்க்ட் சிங்கிள் பிரீமியம் திட்டமாகும்.  இந்த திட்டத்தில் சேரும் பாலிசிதாரர் ஒரு முறை மட்டுமே பிரீமியத்தை செலுத்தினால் அவரது வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். ஐஆர்டிஏஐ-ன் வழிகாட்டுதலின்படி, இது உடனடி ஆண்டு திட்டமாகும்.  அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தான் இந்த திட்டத்திற்கும் உள்ளது. எல்ஐசியின் இந்தத் திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் இரண்டு ஆண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், இதில் பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகும் கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.

எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன.  முதல் பாலிசிதாரரின் ஓய்வூதியம் அவரது கணவன்/மனைவியுடன் இணைக்கப்படும், ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கும் வரை அவர் தொடர்ந்து ஓய்வூதியத்தைப் பெறுவார்.  அதுவே அவர் இறந்த பிறகு பாலிசி எடுப்பதற்காக செலுத்தப்பட்ட அடிப்படை பிரீமியம் அவரது நாமினிக்கு திருப்பித் தரப்படும்.  இரண்டாவது ஆப்ஷனில் கணவன், மனைவி இருவருக்கும் ஓய்வூதியம் இணைக்கப்பட்டுள்ளது.  இதில் ஒருவர் உயிருடன் இருக்கும்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்களோ, அதே ஓய்வூதியத் தொகை அவர்களில் ஒருவரின் மரணத்திற்குப் பிறகும் உயிருடன் இருக்கும் மற்றொருவக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: சம்பள உயர்வு, பதவி உயர்வு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்!

எல்ஐசியின் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பாலிசி எடுத்தவுடனே பென்ஷன் செயல்முறை தொடங்குகிறது. ஓய்வூதியம் பெறுபவர் அவர்களும் தேர்வு செய்யும் ஆப்ஷனை பொறுத்து ஒவ்வொரு மாதமும், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறலாம்.  இந்த திட்டத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் பெறமுடியும், ஆன்லைனில் www.licindia.in என்ற இணையதளத்தில் பெறலாம்.  ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.12,000 ஆகும் செலுத்தலாம், அதேசமயம் வருடாந்திர பயன்முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பம் மற்றும் பாலிசி எடுப்பவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்தது முதலீட்டு தொகை மாறுபடும்.  40 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.  பயனர்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற விரும்பினால் மாதம் குறைந்தது ரூ.1000 முதலீடு செய்ய வேண்டும்.  அதேபோல் காலாண்டு ஓய்வூதியத்துக்கு ஒரு மாதத்தில் குறைந்தது ரூ.3000 முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News