8th Pay Commission விரைவில்? ஊழியர்களின் ஊதியத்தில் 44% உயர்வு எப்போது?

8th Pay Commission: 8 ஆவது ஊதியக்குழு அமலாக்கப்படுவதோடு, அவர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரும் விரைவில் அதிகரிக்கும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2023, 02:42 PM IST
  • 8வது ஊதியக் குழு, சமீபத்திய அப்டேட்.
  • ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பதால் சம்பள அமைப்பும் மாறும்.
  • மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதம் உயர்த்தப்படும்.
8th Pay Commission விரைவில்? ஊழியர்களின் ஊதியத்தில் 44% உயர்வு எப்போது? title=

8வது ஊதியக் குழு, சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக சில கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். எட்டாவது ஊதியக் குழுவின் அமலாக்கம், 18 மாத கால டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியவை இவற்றில் சில முக்கிய கோரிக்கைகளாகும். 8 ஆவது ஊதியக்குழு அமலாக்கப்படுவதோடு, அவர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரும் விரைவில் அதிகரிக்கும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரண்டும் அங்கீகரிக்கப்பட்டால், மத்திய ஊழியர்களின் சம்பளம் 44 சதவிகிதம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பணவீக்கத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அகவிலைப்படி உயர்வு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படுகின்றது. ஜூலை 2023 முதலான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு இந்த மாதம் (செப்டம்பர்) வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். அடுத்ததாக 8வது ஊதியக் குழு எப்போது அமல்படுத்தப்படும், எப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இரண்டும் அங்கீகரிக்கப்பட்டால், மத்திய ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதம் அதிகரிக்கும்.

ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்கு முன்பு 2014-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ஊதியம் மற்றும் படிகளைப் பெற்று வருகின்றனர். இப்போது அடுத்த ஊதியக்குழுவை அமல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால், 8வது ஊதியக் குழு குறித்த தெளிவான நிலைப்பாடு மத்திய அரசிடம் இல்லை. இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்திய அரசு 8-வது ஊதியக் குழுவை அமைத்து, 2025-26க்குள் அதைச் செயல்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிகின்றன. 

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பதால் சம்பள அமைப்பும் மாறும்: 

மத்திய அரசு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்தினால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும். மத்திய பணியாளர்கள் பெறும் சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊழியர்களின் கொடுப்பனவுகள் தவிர, அவர்களின் அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் காரணியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | தபால் அலுவலகத்தின் டபுள் ஜாக்பாட் திட்டம்.. ரூ.10,51,175 கிடைக்கும்

2014ல் 7வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, 2016ம் ஆண்டு முதல் ஃபிட்மென்ட் காரணி மாற்றப்பட்டது. அதிலிருந்து 2.57 சதவீத ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக அரசு உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் விரும்புகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதம் உயர்த்தப்படும்.

8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டாலோ அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டரின் சதவீதத்தை அரசு உயர்த்தினாலோ மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம். தற்போது, மத்திய பணியாளர்களுக்கு 2.57 சதவீத ஃபிட்மென்ட் பேக்டர் உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 சதவீதமாக உயர்ந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து  ரூ.26,000 ஆக உயரும்.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது

2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | RBI புதிய அதிரடி... கணக்கில் பணமே இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்தலாம்: எப்படி? இதோ செயல்முறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News