7th Pay Commission: அதிகரிக்கிறது ஃபிட்மென்ட் ஃபேக்டர், 52 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்

7th Pay Commission: அடுத்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து அரசு முடிவெடுக்கக்கூடும். இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உயரும். இதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 21, 2022, 02:26 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
  • அதிகரிக்கிறது ஃபிட்மென்ட் ஃபேக்டர்.
  • ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அதிகரிக்கும்.
7th Pay Commission: அதிகரிக்கிறது ஃபிட்மென்ட் ஃபேக்டர், 52 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட் title=

7வது ஊதியக்குழு ஃபிட்மென்ட் ஃபேக்டர் அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அடுத்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து அரசு முடிவெடுக்கக்கூடும். இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உயரும். இதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸின் படி, வரைவைச் சமர்ப்பித்த பிறகு, ஜூலை மாத இறுதிக்குள் இந்தப் பிரச்சினை குறித்த கலந்தாய்வு நடத்தப்படலாம். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 52 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ஃபிட்மென்ட் ஃபேக்டரின் கீழ் உயர்த்தப்படலாம்.

பணியாளர்களுக்கு பம்பர் சம்பள உயர்வு

ஜூலை 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி பொருந்தும். ஏஐசிபிஐ தரவுகளின்படி, ஜூலை 1, 2022 முதல், அகவிலைப்படியில் 4 முதல் 5% அதிகரிப்பு இருக்கக்கூடும். அதாவது 38 முதல் 39 சதவிகிதம் வரை அகவிலைப்படி அதிகரிக்கலாம். 

மேலும் படிக்க | 7th Pay Commission: LTC விதிகளில் முக்கிய மாற்றம், புதிய விதிகள் இதோ 

இதுவரை, ஏப்ரல் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் வந்துள்ளன. எனினும், மே மற்றும் ஜூன் எண்களுக்குப் பிறகு, அரசாங்கம் அதை அறிவிக்கக்கூடும். இதற்கிடையில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புக்கு அரசாங்கம் ஒப்புக் கொண்டால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் உயர்வு

7வது ஊதியக்குழுவில், மத்திய ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் ஃபாக்டரால் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். 

இந்த ஃபார்முலா காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் இரண்டரை மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்கு என்ற விகிதத்தில் உள்ளது. இதன் அடிப்படையில், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆகவும், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900 ஆகவும் உள்ளது.

ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை தெரிந்துகொள்ளலாம்

தற்போதுள்ள ஃபிட்மென்ட் ஃபாக்டர் 

6வது CPC பே பேண்ட்: பிபி 1
தர ஊதியம்: ரூ 1800
தற்போதைய நுழைவு ஊதியம்: ரூ 7000
7வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் கணக்கீட்டுக்கு பிறகான நுழைவுச் சம்பளம்: 7000 x 2.57 = ரூ.18,000, 

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 ஆக இருந்தால் என்ன நடக்கும்?

6வது CPC பே பேண்ட்: பிபி 1
தர ஊதியம்: ரூ 1800
தற்போதைய நுழைவு ஊதியம்: ரூ 7000
7வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் கணக்கீட்டுக்கு பிறகான நுழைவுச் சம்பளம்: 7000 x 3 = ரூ.21,000

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதத்தில் ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பார்ட்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News