7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, முழு கணக்கீடு இதோ

7th Pay Commission: அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 06:59 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிந்தது.
  • அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது.
  • அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, முழு கணக்கீடு இதோ  title=

7வது ஊதியக் கமிஷன் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிந்தது. ரக்ஷா பந்தனுக்கு முன், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது.  அரசாங்கத்தால் அகவிலைப்படி4% உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் தொழில்துறை தொழிலாளர்களின் (ஏஐசிபிஐ) தரவு வெளிவந்த பிறகு, அகவிலைப்படியில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என்பது உறுதியானது. தற்போது இது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விவரமாக அறியலாம்.

அகவிலைப்படி 38% ஆக உயர்வு

எங்கள் இணை இணையதளமான ஜீ பிசினஸில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படியின் அதிகரிப்பு ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்தது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது பே-கிரேடு லெவல் 3 இன் அதிகபட்ச அளவுகோலில் ரூ.56,900 அடிப்படை சம்பளத்தில் மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ.259,464 ஆக இருக்கும். ஆனால், தற்போதைய அகவிலைப்படிக்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி பேசினால், சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.27,312 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | 8th Pay Commission: புதிய சூத்திரத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் உயரும் 

38% அகவிலைப்படி தொகை எப்போது வரும்?

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது. செப்டம்பர் 2022 சம்பளத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களின் கணக்கில் வந்து சேரும். மொத்தத்தில், பண்டிகை காலத்தில், ​​ஊழியர்களின் கணக்கில், டிஏ பாக்கியுடன் பெரிய தொகையும் கிடைக்கும். ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு சம்பளம் வரும் என்பதை இந்த கணக்கீடு மூலம் தெரிந்து கொள்வோம்.

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12 = ரூ 27,312

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6840-6120 = ரூ.720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720 X12 = ரூ 8,640

மேலும் படிக்க | ரூ. 96,000 வரை உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்! முழு விவரம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News