உலகின் மிக கொடிய நோயை பெற்ற முதல் மனிதர் இவர்தான்!

உலகிலேயே மிகவும் கொடிய, அரிய வகை பால்வினை நோய் கிருமியானது லண்டன் மனிதரின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது!

Last Updated : Mar 30, 2018, 02:50 PM IST
உலகின் மிக கொடிய நோயை பெற்ற முதல் மனிதர் இவர்தான்! title=

உலகிலேயே மிகவும் கொடிய, அரிய வகை பால்வினை நோய் கிருமியானது லண்டன் மனிதரின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது!

தவறான உடல் உறவினாலும், பாலியல் ரீதியாகவும் பரவக்கூடிய நோய்களில் மிகவும் கொடிய வகைய நோயான gonorrhoea-விற்கான அறிகுறியினை லண்டன் வாழ் மனிதரின் உடம்பில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் தென் கிழக்கு ஆசிய பெண் ஒரவருடன் இவர் தகாத உறவு வைத்துக்கொண்டதால் இவருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே முதன்முறையாக இவரிடம் இந்த நோய் கண்டறியப் பட்டிருப்பதால் இந்த நோய்கான மருந்துகள் இதுவரை இல்லை எனவும், இனிமேல் தான் கண்டறிய வேண்டும் எனவும் அவரை ஆராய்ந்து வரும் மருத்து குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நோய் பரவாமல் இருக்க இவர் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்மனியினை தேடிவருகின்றனர். மேலும் இச்சம்வத்திற்கு பிறகு இவருடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்களிடமும் பறிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Gonorrhoea என்றால் என்ன?

  • பாலியல் ரீதியாகவும், உடல் உறவு மூலமாகவும் பரவக்கூடிய கொடிய நோய்.
  • இது Neisseria gonorrhoeae என்று பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோய் ஆகும்.
  • இது பாதுகாப்பற்ற யோனி, வாய்வழி அல்லது அக செக்ஸ் மூலம் பரவுகிறது
  • நோய் பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளுதல் மூலமும் பரவும்.
  • தாய்க்கு இந்த நோய் இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு பரவும்.
  • Gonorrhoea நோய் கொண்டுள்ளவர்கள் அதற்கான அரிகுறிகளை பெறாமல் இருந்தாலும், அவருடன் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு இந்த நோய் எளிதில் பரவும்.
  • இந்த Gonorrhoea நோய் ஆனது, மனிதர்களின் அந்தரக பகுதிகளை சிதைத்தல், பெண்களின் கற்ப பையினை சிதைத்தல் போன்ற காரியங்களை செய்கிறது.
  • ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், பின்னர் மூட்டு அல்லது இதய வால்வுகளுக்கு பரவிவிடும்.

Trending News