போர் இல்லாத சகாப்தத்தை நோக்கி போக வேண்டும்! உக்ரைன் அமைச்சர் டெல்லியில் பேட்டி

Ukraine Minister Emine Dzhaparova at delhi: இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் எமின் ட்ஜபரோவா,  போரின் எந்த சகாப்தமும் உண்மையில் முக்கியமானது அல்ல' என்று தெரிவித்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 10, 2023, 03:41 PM IST
  • உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் எமின் ட்ஜபரோவாவின் இந்திய பயணம்
  • போரின் எந்த சகாப்தமும் முக்கியமானது அல்ல
  • ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு இந்தியா வரும் முதல் உக்ரைன் அதிகாரி
போர் இல்லாத சகாப்தத்தை நோக்கி போக வேண்டும்! உக்ரைன் அமைச்சர் டெல்லியில் பேட்டி title=

நியூடெல்லி: உக்ரைனின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் எமின் ட்ஜபரோவா தில்லிக்கு வந்தார். இன்று முதல் 4 நாள் இந்தியாவில் இருக்கும் இவர், ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு இந்தியா வரும் முதல் உக்ரைன் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு திங்கள்கிழமை வந்த உக்ரைன் வெளியுறவுத்துறை இணையமைச்சர், செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜனநாயகம், கலந்துரையாடல் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை த்ஜபரோவா பாராட்டினார். மோடியின் 'போரின் சகாப்தம்' மற்றும் உத்திரீதியிலான செயல்பாடுகள் உலக அரங்கில் மிகவும் முக்கியமானது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

"இந்தியா தனது ஆற்றல் வளங்கள், இராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல் தொடர்புகளை பல்வகைப்படுத்துவதில் நடைமுறையில் இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் ஜனநாயகம், உரையாடல் & பன்முகத்தன்மை & 'போர் இல்லாத சகாப்தம்' & மூலோபாய பயன்பாடு மிகவும் முக்கியமானது" என்று உக்ரைனின் வெளியுறவு இணையமைச்சர் எமின் ட்சாபரோவா கூறினார்.

மேலும் படிக்க | Microsoft Edge யூஸ் பணறீங்களா? அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை!

இந்த பயணத்தின் போது, த்ஜபரோவா, வெளியுறவு அமைச்சகத்தின் உயரதிகாரிகலுடன் பேச்சுவார்த்தை நடத்துவார், அங்கு இருதரப்பு உறவுகள், உக்ரைனின் தற்போதைய நிலைமை மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த பயணத்தின் போது, வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியையும், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியையும் த்ஜபரோவா சந்திக்கிறார்.

மேலும் படிக்க | உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய திபெத் மதத் தலைவர் தலாய் லாமா வைரல்

உக்ரைனுடன் இந்தியா இணக்கமான நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்கிறது, கடந்த 30 ஆண்டுகளாக இராஜதந்திர உறவுகளை நிறுவியதில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று MEA வெளியீடு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் வெளியுறவுத்துறையின் முதல் இணையமைச்சர் எமின் ட்ஜபரோவாவின் வருகை இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் நலன்களை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கும்.

மேலும் படிக்க | வெயில் காலம் வந்தாச்சி!! இனி ஏசி/கூலர் ஓடும்..ஆனா பில் வரவே வராது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News