வட கொரியா அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை: பெண் கைது

Last Updated : Feb 15, 2017, 05:15 PM IST
வட கொரியா அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை: பெண் கைது title=

மலேஷியா வட கொரியா தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் வட கொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் வட கொரியா அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

இந்நிலையில், கிம் ஜாங் உன்-னின் தந்தையின் சகோதரர் மகனான கிம் ஜாங் நாம் மலேசியாவில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மலேசிய போலீசார் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருவதாகவும், வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பலின் சதி திட்டப்படி, இரண்டு பெண்கள் கிம் ஜாங் நாம்-ஐ கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Trending News