அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்; போர்க்களமாகும் பாரிஸ்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மக்கள் முன்னெடுத்துள்ள மஞ்சள் அங்கி போராட்டத்தில், திடீரென ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 17 காவலர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Last Updated : Mar 18, 2019, 01:03 PM IST
அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்; போர்க்களமாகும் பாரிஸ்! title=

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மக்கள் முன்னெடுத்துள்ள மஞ்சள் அங்கி போராட்டத்தில், திடீரென ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 17 காவலர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்ட இந்த மஞ்சல் அங்கி போராட்டத்தில் ஏற்பட்ட திடீர் கலவரத்தால் பரிஸ் நகரமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த வன்முறையில் 120-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதாகவும் பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் பெட்றோல் மற்றும் டீசல் மீதான வரியை பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் உயர்த்துவதாகத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடத்தில் ஈடுப்படும் மக்கள் கார் சாரதிகளின் மஞ்சள் அங்கியை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த போாட்டம் ‘மஞ்சள் அங்கி போராட்டம்’ என அழைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் பிரான்ஸின் தலைநகர் பரிசில் 10,000 மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டனர்.

வார இறுதி நாட்களில் மாத்திரமே நடைபெறும் குறித்த போராட்டத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் தலைமையிலான அரசாங்கம் உடன்பட்டது. பெட்றோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை இரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. 

எனினும் அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. மேலும் அங்குள்ள, அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வந்து செல்லக்கூடிய புகழ்பெற்ற ஹோட்டல்கள் மற்றும் ஆடம்பர கைப்பைகளை விற்கும் கடை, வங்கி கட்டிடம் உள்ளிட்டவற்றுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர். 

இதையடுத்து போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Trending News