ஆஸ்திரேலியா: கரையைக் கடந்தது வரோனிகா புயல்!

ஆஸ்திரேலியாவை பில்பாரா பகுதியில் வரோனிகா புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 25, 2019, 08:44 AM IST
ஆஸ்திரேலியா: கரையைக் கடந்தது வரோனிகா புயல்! title=

ஆஸ்திரேலியாவை பில்பாரா பகுதியில் வரோனிகா புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வரோனிகா புயல் இன்று கரையைக் கடந்ததை அடுத்து அங்கு தற்போது அடுத்த 24 மணி நேரம் பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த காற்று வீசுவதாலும் வெள்ளம் பெருக்கெடுப்பதாலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது புயலாக மாறி உள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆஸ்திரேலியாவுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது

Trending News