தமிழ் மொழி கற்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி சி.பி.எஸ்.இ. - ஐ.சி.எஸ்.இ. உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என திமுக கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-
சீனாவின் சுரங்கப்பாதையில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் கிழக்குப்பகுதியில் உள்ள குயிங்டோவில் நகரில் இன்று பள்ளிப்பேருந்து ஒன்று சுரங்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அப்பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாங்டங் மாகாணத்தின் வெய்ஹாய் என்னும் இடத்தில் தங்கி படித்துவந்த அந்த குழந்தைகள் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு வயது நான்கு முதல் ஏழு வரை மட்டுமே என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
டெல்லியின் துக்லகாபாத் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக மாணவர்கள் 100 பேருக்கு திடீர் மயக்கமடைந்துள்ளனர்.
பள்ளி வளாகத்துக்கு அருகே உள்ள கன்டெய்னர் கிடங்கில் இருந்த ஒரு கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற உபாதகைகள் ஏற்பட்டது. இதனால் சுமார் 100 குழந்தைகள் மயக்கமடைந்தனர்.
மேலையூர் திருமங்கலக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைந்துள்ளது. தற்போது இந்த பள்ளியில் மிக குறைந்த மாணவ, மாணவிகளே படிக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் பள்ளி விரைவில் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. எந்தனையோ பேருக்கு வாழ்வு தந்த இந்த பள்ளி மூடப்படமால் இருக்க அனைவரும் ஓன்று சேர்ந்து தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
வீடியோ பார்க்க:
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவ–மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் என மொத்தம் 56 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளன. மே 1-ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன.
www.cbseresults.nic.in, www.results.nic.in www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. எனும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் இன்று நண்பகலில் வெளியாக உள்ளன. பகல் 2 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என தகவல் வந்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி வெயில் இன்றுடன் முடிவடைகிறது.
ஆனாலும் பகலில் அனல் காற்று வீசுவதால் வெப்பம் மக்களை வாட்டியெடுத்து வருகிறது. எனவே பள்ளிகளின் கோடை விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்படுமா என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்ப்பில் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.