பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார்.
மத்திய பிரதேசத்தில் தலைவிரித்து ஆடி வரும் மணல் மாஃபியா குறித்து செய்திகள் எழுதி வந்த பத்திரிக்கையாளர் சந்தீப் ஷர்மா லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்!
மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் மற்றும் அவரது 92 வயது தாய் இருவரும் இன்று(சனிக்கிழமை) மொஹலலியில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளனர்.
ANI அறிக்கையின்படி, இருவரும் கொடுரமான நிலையினில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, ஷிமிமாணி அகாலித் தலைவர் சுகுபிர் சிங் பாதல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் அவரது தாயுடன் கொலை செய்யப்பட்டது பெரும் வருத்தத்தினை ஏற்படுத்துகிறது" என பதிவிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மக்கள் மன்றங்கள் மற்றும் பல அரசியல் கட்சி தொழிலாளர்கள் இனைந்து இன்று (செவ்வாய்) பெங்களுருவில் பேரணியில் ஈடுப்பட்டனர்.
பிரபல பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் கவுரி லங்கெஷ் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்ததை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கர்நாடகா, ஜனசக்தி, ஆம் ஆத்மி கட்சி மற்றும் பல மாணவர் குழுக்கள் ஆகியோர் இந்த பேரணியின் ஒரு பகுதியாக இருந்தனர்.
CPI-M தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் படத்தையும் பகிர்ந்துள்ளது.
கவுரி லங்கேஷ் கொலைவழக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை சமர்பித்தது கர்நாடக அரசு.
கடந்த செப் 6-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷ். அவரது மூத்த மகள், கவுரி லங்கேஷ். பல்வேறு பத்திரிகைகளிலும், கட்டுரைகள் எழுதி வந்த அவர், கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.
பெங்களூருவின் ராஜ ராஜேஸ்வரி நகரில், தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.
பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார்.
Karnataka Home Minister Ramalinga Reddy announces Rs.10 lakh reward for any clue related to #GauriLankeshMurder.
— ANI (@ANI) September 8, 2017
பிகாரில் ராஷ்ட்ரிய சஹாரா நாளிதழில் பணிபுரியும் உள்ளூர் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஷ்ட்ரிய சஹாரா நாளிதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா, பீகார் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பேங்கில் இருந்து 1 லட்சம் பணம் எடுத்துகொண்டு வரும் வழியில், பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
‘லங்கேஷ் பத்திரிகே’ ஆசிரியர் பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்துத்துவா வகுப்புவாத மதவெறிக் கும்பலின் ரத்த வெறிக்கு மேலும் ஒரு சிந்தனையாளர் பலி ஆகி உள்ளார். கன்னட பத்திரிகையான ‘லங்கேஷ் பத்திரிகே’ வார இதழின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான ‘கௌரி லங்கேஷ்’ பெங்களூருவில் செப்டம்பர் 5-ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்.
பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகா உட்பட தேசிய அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட கவறி லங்கேஷுக்கு நக்ஸலைட்டுகளிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்ததாக அவரின் சகோதரர் இந்த்ரஜித் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.