பீகாரில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா சுட்டுக்கொலை

Last Updated : Sep 7, 2017, 06:08 PM IST
பீகாரில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா சுட்டுக்கொலை title=

பிகாரில் ராஷ்ட்ரிய சஹாரா நாளிதழில் பணிபுரியும் உள்ளூர் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராஷ்ட்ரிய சஹாரா நாளிதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா, பீகார் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பேங்கில் இருந்து 1 லட்சம் பணம் எடுத்துகொண்டு வரும் வழியில், பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பத்திரிகையாளரான பங்கஜ் மிஸ்ராவை சுட்டுக் கொண்டவரில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தனிப்பட்ட விரோதம் காரணமாக அவரை சுற்றுகொன்றதாக கூறினான என ஆல்வார் மாவட்ட எஸ்.பி. திலீப் குமார் கூறியுள்ளார்.

 

Trending News