இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் கைல் ஹோம் தலா 35 ரன்களை குவித்தனர். நிதான துவக்கத்தை அளித்த ஜோடியை பாண்டியா பெவிலியனுக்கு அனுப்பினார். துவக்க ஜோடியை தொடர்ந்து களமிறஹ்கிய ஷை ஹோம் 25 ரனக்ளுடனும், ராஸ்டன் சேஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1-0 என்ற முன்னிலையில், 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சையே தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய வீரர் ரஹானேவும், ஷிகர் தவானும் தனது பேட்டிங்கை தொடங்கினர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரகானே, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.
இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை விடாததால் மீதி ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராகக் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். தற்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிவிட்டதாக டுவிட்டரில் அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியுடன் அனில் கும்ப்ளே செல்லவில்லை.
இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் , ‘பி’ பிரிவை சேர்ந்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவை சேர்ந்த வங்காளதேசும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
நேற்று நடைபெற்று 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதின. இந்த போட்டியில் இந்தியா வங்காளதேசத்தை ஊதித் தள்ளியது.
இதுகுறித்து அதிரடி வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதாவது, ஒரே வீட்டில் நடக்கும் சண்டையில் அரையிறுதி வரை வந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேராண்டி, இனி அப்பாக்கள் தினத்தில் மகனுடன் பைனல் மிச்சமுள்ளது. இதை சீரியஷாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட்கோஹ்லி தன்னுடைய உடற்பயிற்சி குறித்து கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சர் தான் என்னுடைய உடல் மாற்றத்துக்கு முக்கிய காரணம். 2012-ம் ஆண்டு பயிற்சியாளர் பிளெட்சர், ‘உடல் திறனை மாற்ற வேண்டும். தகுதியான உடலமைப்பு இருந்தால் நீண்ட நேரம் நின்று விளையாட முடியும். அதன் மூலம் கூடுதல் ரன்களை குவிக்கலாம். அதற்கு கடுமையான உடற்பயிற்சி தேவை’என கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது
ஹோபர்ட்டில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 161 ரன்னில் மீண்டும் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்களும், ஆஸ்திரேலியா 244 ரன்களும் எடுத்தன.தனது 2_வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணியின் விளையாட்டு வீரரான விராட் கோலியின் பிறந்த நாளை இன்று. இதை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் பலர் கோலிக்கு ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தான் செயல்பட்டு வருகிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஹாட்ரிக் வெற்றி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன்கள் வித்தி யாசத்தில் இந்தியா வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஹாட்ரிக் வெற்றி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன்கள் வித்தி யாசத்தில் இந்தியா வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடும் தோனி தலைமையிலான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா மற்றும் அமித் மிஸ்ரா மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர்-ஜனவரி ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய ஒருநாள்போட்டி அணியில் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை. அமெரிக்காவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் எதிராக நடந்த டி20 தொடரிலும் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி. இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இயக்குனராகவும் செயல்பட்டார். லோகேஷ் ராகுலை குறித்து அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.