பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் துவங்கியது!!

தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

Last Updated : Mar 19, 2018, 10:53 AM IST
பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் துவங்கியது!! title=

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15-ந் தேதி துவங்கியது. தமிழக சட்டசபையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றே மீண்டும் சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்ட சபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று (திங்கட் கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் துவங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெரும். 

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் (21-ந் தேதி) தொடர்ந்து நடைபெறுகிறது. இறுதி நாளான 22-ந் தேதி, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

அத்துடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது. தொடர்ந்து, துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றாக வேண்டும். ஆனால், அந்தக் கூட்டத்தை உடனடியாக கூட்டாமல், சில மாத இடைவெளியில் கூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

Trending News