அரசு இதழில் வெளியானது காவிரி மேலாண்மை ஆணையம்!!

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அறிவிப்பு மத்திய அரசின் இதழில் வெளியானது!!

Last Updated : Jun 1, 2018, 05:25 PM IST
அரசு இதழில் வெளியானது காவிரி மேலாண்மை ஆணையம்!! title=

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அறிவிப்பு மத்திய அரசின் இதழில் வெளியானது!!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. 

இதைதொடர்ந்து, தற்போது பருவமழை தொடங்கியும், மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுத்தது. வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று மாலைக்குள் அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்னர் காவிரி ஆணையம் அமைப்பதற்கான உத்தரவு அறிக்கையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கையெழுத்திட்டார். இதையடுத்து, காவிரி ஆணையம் பற்றிய தகவலை இதழில் வெளியிட்டத்து.

 

Trending News