வேலை தேடி வந்த பெண்ணிடம் அத்துமீறல்: தனியார் நிறுவன உரிமையாளர் கைது!

சென்னை மாதவரம் போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 28, 2022, 11:35 AM IST
  • வேலை தேடிச் சென்ற பெண்ணிடம் அத்துமீறல்
  • காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை
  • புழல் சிறையில் அடைக்கப்பட்ட உரிமையாளர்
வேலை தேடி வந்த பெண்ணிடம் அத்துமீறல்: தனியார் நிறுவன உரிமையாளர் கைது! title=

சென்னை மாதவரத்தில் வேலைக்காக நேர்காணலுக்கு வந்த இளம் பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் பேசியதோடு ஆபாச செயலில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதவரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

சென்னை கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு. இவர் சென்னை மாதவரம் 200 அடி சாலை குமரன் மருத்துவமனை அருகில் கணேஷ் எண்டர்பிரைசஸ் என்கிற பெயரில் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது நிறுவனம் செயல்படும் அலுவலகத்திற்கு செயலாளர் பதவிக்கு பெண்கள் தேவை என விளம்பரம் செய்து உள்ளனர். அந்த விளம்பரத்தை அடுத்து வேலைக்காக அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேர்காணலுக்கு சென்றுள்ளார். 

மேலும் படிக்க | முந்தையை அதிமுக அரசின் அலட்சியமே அரசு மருத்துவமனையில் தீ விபத்து: அமைச்சர் விளக்கம்

அந்தப் பெண்ணிடம் நேர்காணல் நடத்திய நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபு ஆபாச வார்த்தைகளை பேசி, சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார் நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Arrest

விசாரணையில் நிறுவன உரிமையாளர் கணேஷ் பாபு நேர்காணலுக்கு வந்திருந்த அந்த இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இளம்பெண்ணின் ஆடைகளை தொட்டு அவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தஞ்சை தேர் விபத்து: உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

இதனையடுத்து சென்னை மாதவரம் போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.  வேலைக்கு நேர்காணலுக்கு வந்து இருந்த பெண்ணிடம் நிறுவன உரிமையாளர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News