கத்தியால் வெட்டிய கணவரை திரும்ப குத்திக் கொன்ற மனைவி

போதை வெறியில் இருந்த கணவர் மனைவியை கத்தியால் வெட்டியதும், வலியால் துடித்த மனைவி திரும்ப கணவரை வெட்டி கொன்றதும் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 11, 2022, 03:59 PM IST
  • மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்
  • கத்தியை பிடிங்கி கணவரை வெட்டிய மனைவி
  • கணவர் பலி - மனைவி சிகிச்சை
கத்தியால் வெட்டிய கணவரை திரும்ப குத்திக் கொன்ற மனைவி title=

வேலூர் மாவட்டம் வேலப்பாடியைச் சேர்ந்தவர் குமரவேல். 60 வயதான இவர் லாரி பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார்.  இவரது மனைவி கோமதி(48). இவர் கூட்டுறவு வீடு கட்டும் கடன் சங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார். நடுத்தர் குடும்ப வாழ்க்கையை வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையான குமரவேல், தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் கோமதி தன் நிம்மதியையும் இரவு தூக்கத்தையும் இழந்து தவித்திருக்கிறார். நாட்கள் கடந்துவிட பிரச்சினைக்கும் முடிவு வரும் என்று நினைத்துக்கொண்டிருந்த போது பேரதிர்ச்சி..!

vellore murder,கணவரை குத்திக்கொன்ற மனைவி

சம்பவத்தன்று இரவு 1.30 மணி இருக்கும்.... குமரவேல் தலைக்கேறிய போதையில் மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பதிலுக்கு கோமதியும் அதை தட்டி கேட்டிருக்கிறார். இதனால் போதையிலிருந்த குமரவேல் ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் கை,கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அலறித்துடித்த கோமதி, குமரவேலிடமிருந்து கத்தியை பிடுங்கி அவரின் கழுத்து பின்புறத்தில் ஆழமாக வெட்டியுள்ளார். இதில் குமரவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

vellore murder,கணவரை குத்திக்கொன்ற மனைவி

மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த கோமதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாருக்கு தகவல் கொடுத்து குமரவேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்திரத்தில் கணவர் மனைவியை வெட்டியதும், வலியால் துடித்த மனைவி திரும்ப கணவரை கத்தியால் வெட்டி கொன்றதும் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கு - அபராதத்துடன் தள்ளுபடி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News