சிறையில் வாடும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஸ்டாலினிடம் வைகோ கோரிக்கை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நீண்ட காலமாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2021, 02:29 PM IST
  • சாந்தன்‌, முருகன்‌, பேரறிவாளன்‌ ஆகிய மூவரும்‌ மரண தண்டனை கைதிகள் போல மனதளவில்‌ சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்‌.
  • இந்தப்‌ பிரச்சினை குறித்து மத்திய அரசிடம்‌ கருத்துக்‌ கேட்க வேண்டிய அவசியமே கிடையாது.
  • ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்‌ என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ வலியுறுத்தி வருகிறது.
சிறையில் வாடும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஸ்டாலினிடம் வைகோ கோரிக்கை  title=

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நீண்ட காலமாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர்‌ வெளியிட்டுள்ள‌ அறிக்கையில்‌ கூறியிருப்பதாவது :- 

தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில்‌ 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம்‌ அனுபவித்து வருகின்ற ஏழு பேரில்‌, சாந்தன்‌, முருகன்‌, பேரறிவாளன்‌ ஆகிய மூவரும்‌ மரண தண்டனை கைதிகள் போல மனதளவில்‌ சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்‌. அதைப் போலவே நளினி, ராபர்ட்‌ பயாஸ்‌, ரவிச்சந்தின்‌, ஜெயக்குமார்‌ ஆகியோரின்‌ இளமை வாழ்க்கையும்‌ இருண்டு பாழாய்ப்போனது.

ALSO READ | தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

உச்சந்திமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில்‌, எழுவரையும்‌ தமிழக அரசே விடுதலை செய்யலாம்‌ என்று கூறிய பின்னரும்‌, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின்‌ அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக்‌ கோரிக்கை விடுத்தும்‌, ஆளுநர்‌ அந்தக்‌ கோரிக்கையை குப்பைத்‌ தொட்டியில்‌ போடுவது போல்‌ போட்டுவிட்டார்‌.

இந்தப்‌ பிரச்சினை குறித்து மத்திய அரசிடம்‌ கருத்துக்‌ கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால்‌ மத்திய அரசிடம்‌ கருத்துக்‌ கேட்டதாகவும்‌, மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும்‌ இதுவரை மோசடி நாடகத்தை  நடத்தி வந்தனர்‌. ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்‌ என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதல்வர்‌ ஸ்டாலின்‌, ஏழு பேரையும்‌ விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின்‌ உள்ளத்தில்‌ பால்வார்க்கும்‌ செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ அன்போடு வேண்டுகிறேன்,‌ என்று தெரிவித்துள்ளார்‌.

ALSO READ | ஒரு நாளைக்கு 20000 ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News