மருத்துவப்படிப்பில் 85% இடஒதுக்கீடு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Jul 14, 2017, 11:47 AM IST
மருத்துவப்படிப்பில் 85% இடஒதுக்கீடு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு title=

மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் தேதி மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் 85 சதவீதம் இட ஒதுக்கீடு ஏற்படுத்தி அரசாணை பிறப்பித்தது. 

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அரசாணைக்கு எதிராக சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

Trending News