விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடத் தடை: தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொது இடங்களில் சிலைகள் வைத்து, வழிபட, தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 31, 2021, 09:11 AM IST
விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடத் தடை: தமிழக அரசு title=

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொது இடங்களில் சிலைகள் வைத்து, வழிபட, தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து தமிழகத்தில் (Tamil Nadu) வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள ஆன்மீக விழா கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு பல விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மீக விழாக்களை முன்னிட்டு மத சம்பந்தமான ஊர்வலங்கள், திருவிழாக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக பொது இடங்களில் சிலைகளை வைத்து, வழிபாடு நடத்த தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், வீட்டில் தனிப்பட்ட வகையில் நடத்தப்படும் விநாயக சதுர்த்தி விழா வழிபாட்டுக்கும், வழிப்பட்ட சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது சென்னையில், சாந்தோம் கடற்கரை தொடங்கி, நேப்பியர் பாலம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க தடை விதித்துள்ளது தமிழக அரசு

ALSO READ | செப். 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம்; உங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்..!!

சென்னை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் இதர இடங்களில் கிறித்துவ சமயத்தாரால் கொண்டாடப்படும் மேர் அன்னையின் பிறந்தநாள் திருவிழாவின்போது, பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,523 பேருக்கு கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,13,360 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில், நேற்று ஒரே நாளில், 183 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 188 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ALSO READ | தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News