மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோ

7th Pay Commission: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இரண்டு முறை திருத்தங்களைச் செய்கிறது. இது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படுகிறது.

7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி 4% முதல் 5% வரை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசின் அனைத்து அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மிக விரைவில் திருத்தம் செய்யப்படலாம். விதிகளின்படி, ஜூலை 1 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரண திருத்தம் செய்யப்பட உள்ளது. இது வழக்கமாக செப்டம்பர்-அக்டோபரில் அறிவிக்கப்படாலும், இந்த ஏற்றம் ஜூலை 1, 2024 முதல் பொருந்தும். மேலும் ஜூலை 1 முதல் அறிவிப்பு வரும் வரையிலான காலத்திற்கான அரியர் தொகையும் அளிக்கபப்டும். 

2 /8

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் இரண்டு முறை திருத்தங்களைச் செய்கிறது. இது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் திருத்தங்கள் வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அறிவிக்கப்படும். முன்னதாக, மார்ச் 2024 இல், மத்திய ஊழியர்களின் டிஏ (DA) 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இப்போது 50 சதவீத அகவிலைப்படியைப் பெறுகிறார்கள்.

3 /8

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. இது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு, அதாவது ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. 

4 /8

இப்போது, ​​டிஏ உயர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமாக ஜனவரி மாத உயர்வு மார்ச் மாதத்திலும், ஜூலை மாத டிஏ உயர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றது. எனினும், ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதலான டிஏ அரியர் தொகை ஊழியர்களுக்கு கிடைக்கும். 

5 /8

அகவிலைப்படி 4% அதிகரித்தால், 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் அனைவருக்கும் மாதாந்திர மற்றும் ஆண்டு அடிப்படையில் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். 18,000 அடிப்படைச் சம்பளமாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியில் 4 சதவீதம் அதாவது மாதம் ரூ. 720 அதிகரித்து, அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8,640 அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் ரூ.20,000 ஆக உள்ள ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.800, ஆண்டுக்கு ரூ.9,600 அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் ரூ.25,000 என்றால், மாதத்திற்கு ரூ.1,000 மற்றும் ஆண்டுக்கு ரூ.12,000 உயர்த்தப்படும்.

6 /8

அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால், மாதம் ரூ.1,200, ஆண்டுக்கு ரூ.14,400 அதிகரிக்கும். அடிப்படைச் சம்பளம் ரூ.40,000 எனில், மாத சம்பளம் ரூ. 1,600, ஆண்டுக்கு ரூ.19,200 அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் ரூ.50,000 பெறுபவர்களுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் வருடத்திற்கு ரூ.24,000 அதிகரிக்கும் 

7 /8

அடிப்படை சம்பளம் ரூ.60,000 ஆக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.2,400 மற்றும் ஆண்டுக்கு ரூ.28,800 பலன் கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ.70,000 எனில், மாதம் ரூ.2,800 மற்றும் ஆண்டுக்கு ரூ.33,600 அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் ரூ.80,000 என்றால், மாதம் ரூ.3,200 மற்றும் ஆண்டுக்கு ரூ.38,400 அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் ரூ.90,000 ஆக உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,600 மற்றும் ஆண்டுக்கு ரூ.43,200 உயரும். அடிப்படை ஊதியம் ரூ. 1,00,000 பெறுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.4,000 மற்றும் வருடத்திற்கு ரூ.48,000 உயர்வு கிடைக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.