புதுவையில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்

புதுவையில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Last Updated : Mar 21, 2020, 08:41 PM IST
புதுவையில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல் title=

புதுவையில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் புதுவையில் நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Trending News