தமிழகத்தில் துவங்கியது பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான (சிறப்பு பிரிவு) கலந்தாய்வு இன்று சென்னையில் தொடங்கியது.

Last Updated : Jun 25, 2019, 12:12 PM IST
தமிழகத்தில் துவங்கியது பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு! title=

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான (சிறப்பு பிரிவு) கலந்தாய்வு இன்று சென்னையில் தொடங்கியது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 

அதன்படி, தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று முதல் வரும் 27- தேதிவரை 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாற்றுத்திறனாளிகளுக்கு இன்றும், ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு நாளையும், 27-ஆம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது.

தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நாளை முதல் 28-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலந்தாய்வு இன்று துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

Trending News