உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க தமிழக பள்ளிகளுக்கு உத்தரவு!

வரும் ஜூன் 3-ஆம் நாள் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரம், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிரப்பித்துள்ளது!

Last Updated : May 29, 2019, 05:37 PM IST
உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க தமிழக பள்ளிகளுக்கு உத்தரவு! title=

வரும் ஜூன் 3-ஆம் நாள் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரம், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிரப்பித்துள்ளது!

கோடை விடுமுறைக்குப் பின்னர் தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 3-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் சுகாதாரம், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டிகள், கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர், மின் இணைப்புகள், இணைய வசதி, மேசை மற்றும் நாற்காலிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்து செப்பனிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை, பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீரை முழுமையான அளவில் விநியோகம் செய்ய பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாணவருக்கு சராசரியாக கழிவறை பயன்பாட்டுக்கு 10 லிட்டரும், குடிநீர் பயன்பாட்டுக்கு 1 லிட்டரும் தண்ணீர் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், மாணவர்களின் அன்றாட பயன்பாட்டுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பது பள்ளிகளுக்கு சவாலான ஒன்றாக உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

பல பள்ளிகளில் போர்வெல் வசதிகள் இருந்த போதிலும் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டதால், போர்வெல் மூலம் தண்ணீர் தொடர்ந்து கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல், சுகாதாரமற்ற தண்ணீரால் மாணவர்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீரகத் தொற்று போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், கோடை காலம் முடிந்தவுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் அல்லது படிமுறை அடிப்படையில் பள்ளிகளை நடத்தலாம் என்றும் பள்ளி நிர்வாகங்கள் கருதுகின்றன.

Trending News