சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி!

சென்னையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக "அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழா-2017" கொண்டாடப்பட்டது!

Last Updated : Nov 23, 2017, 12:50 PM IST
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி! title=

சென்னையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக "அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழா-2017" கொண்டாடப்பட்டது!

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக "அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழா-2017" முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னை, அடையாறு, காந்தி நகர், கெனால் பேங்க் ரோடில் அமைந்துள்ள புனித லூயிஸ் காதுகேளாத மற்றும் பார்வையற்றோருக்கான உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 23.11.2017 வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர். டாக்டர் வி. சரோஜா துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

இந்த விளையாட்டுப் போட்டிகளில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளும், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் படைத்த மாணவ மாணவியர்களும் சுமார் 800 போர் கலந்து கொண்டனர். இவர்களுக்கான ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டத்தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், நடைப்போட்டி, உருளை கிழங்கு சேகரித்தல் உள்ளிட்ட 80 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திரு.வி.அருண்ராய் இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வெ. அன்புச்செல்வன் இ.ஆ.ப. உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்

Trending News